சீரியலில் மட்டும்மல்ல.. நிஜ வாழ்க்கையிலும் அப்பாவான பிரபல சீரியல் நடிகர் – குவியும் வாழ்த்துக்கள்!
விஜய் டிவி “காற்றுக்கென்ன வேலி” சீரியலில் வில்லனாக நடித்து வரும் நடிகர் மானஸ் தனது குடும்பத்தில் நடந்த சந்தோஷமான செய்தி குறித்து சமூக வலைதளப்பக்கத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
காற்றுக்கென்ன வேலி சீரியல் வில்லன்:
தமிழ் டாப் சீரியல்களில் ஒன்றாக விஜய் டிவியில் காற்றுக்கென்ன வேலி சீரியல் இருக்கிறது. பல அதிரடி ட்விஸ்ட்களுடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் இந்த சீரியலில் ஹீரோ ஹீரோயின் காதல் காட்சிகளுக்கு பல ரசிகர்கள் இருக்கின்றனர். தொடக்கத்தில் ஆசிரியரை மாணவி காதலிப்பதா என சில சர்ச்சைகள் கிளம்பியது. ஆனால் அதன் பின் கதையில் கொண்டு வரப்பட்ட மாற்றங்கள் காரணமாக மக்களின் விருப்பமான சீரியல்களில் ஒன்றாக இந்த சீரியல் இருக்கிறது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இந்நிலையில் இந்த சீரியலில் வில்லனாக மாதவன் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் மானஸ். அவர் சின்னத்திரையில் பல டாப் சீரியல்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஒரு வில்லனுக்கு இவ்வளவு ரசிகர்களாக என சொல்லும் அளவிற்கு அவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். அந்த வகையில் மான்ஸ் தனது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் தனக்கு பையன் பிறந்துள்ள செய்தியை மிகவும் அருமையான கேப்சன் மூலமாக தெரிவித்துள்ளார். ஆனால் இன்னும் அவர் குழந்தையின் புகைப்படத்தை வெளியிடாத நிலையில், அவருடைய இந்த பதிவிற்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் காற்றுக்கென்ன வேலி சீரியலில் இன்னும் 150 எபிசோடுகள் வரை என்ற டெலிகாஸ்ட் செய்யப்படும் என்ற செய்தி வெளியாகி இருப்பதால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.