எங்க கண்ணே பட்டுடும் போல.. முதல் திருமண நாளை கொண்டாடும் பிரபல சின்னத்திரை ஜோடி – ரசிகர்கள் வாழ்த்து!
தமிழ் சின்னத்திரையில் காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடிகளின் வரிசையில் நடிகை ஷபானாவும் ஆர்யனும் இடம் பிடித்துள்ளனர். இருவரும் பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில், இன்று அவர்களின் முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடி வருகின்றனர்.
முதலாம் ஆண்டு திருமணநாள்:
சின்னத்திரை நடிகர் நடிகைகளுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் சீரியல் நடிகர்கள் பலர் தன்னுடன் நடிக்கும் சக நடிகைகளை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். அந்த வகையில் ஜீ தமிழில் செம்பருத்தி சீரியலில் நடித்த நடிகை ஷபானா மற்றும் விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் கதாபாத்திரத்தில் நடித்த ஆர்யனும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். இருவரும் வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களின் காதலுக்கு அவர்களது பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
Follow our Instagram for more Latest Updates
அதனால் அவர்கள் இருவரும் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் திருமணத்திற்கு நெருங்கிய நண்பர்கள் மட்டுமே வந்த நிலையில் அதன் பின் வரவேற்பு நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதன் பின் அவர்களுக்கு இடையே பிரச்சனை என்று வதந்திகள் பரவி வந்தது. ஆனால் அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் இருவரும் தங்களின் திருமண வாழ்க்கையை சந்தோசமாக வாழ்ந்து வருகின்றனர்.
தமிழக மகளிர் கல்லூரிகளில் போலீஸ் பாதுகாப்பு – உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி அறிவுரை!
Exams Daily Mobile App Download
இந்நிலையில் இன்று (நவம்பர் 11) இருவரும் தங்களின் முதல் திருமண நாளை கொண்டாடி வருகின்றனர். அவர்களுக்கு பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் தற்போது ஷபானா புது சீரியலில் கமிட்டாகி இருக்கிறார். மேலும் ஆர்யனும் ஜீ தமிழில் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் கதாநாயகனாக கலக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.