பிரபல இயக்குனர் திருமுருகனின் புது சீரியல் – அதிர்ச்சியில் ரசிகர்கள்! காரணம் இதுவா ?
சன் டிவியில் பிரபல இயக்குனர் திருமுருகன் இயக்கிய சீரியல்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். அந்த வகையில் அவர் புது சீரியல் ஒன்று தொடங்க இருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டார். அது குறித்த அப்டேட் ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது.
புது சீரியல்:
தமிழ் சின்னத்திரையில் பல வெற்றி சீரியல்களை கொடுத்தவர் இயக்குனர் திருமுருகன். 90’ஸ் கிட்ஸ் காலத்தில் இளசுகள் முதல் பெருசுகள் வரை சீரியல்களை விரும்பி பார்க்க வைத்தவர் இவர். இவருடைய மெட்டி ஒலி, நாதஸ்வரம், கல்யாண வீடு, குல தெய்வம் என பல சீரியல்கள் இன்னும் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது. மேலும் இவருடைய நாதஸ்வரம் சீரியல் கின்னஸ் ரெகார்ட் பெற்றுள்ளது. அவருடைய சீரியல்கள் அனைத்துமே நிஜ வாழ்க்கையில் உள்ள குடும்பக் கதையை மையமாக கொண்டு எடுக்கப்படும்.
Exams Daily Mobile App Download
அதனால் தான் அவருடைய சீரியல்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். இந்நிலையில் இயக்குனர் திருமுருகன் சன் டிவியில் புதிய சீரியல் ஒன்றை இயக்க இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அவரே பதிவு ஒன்றை வெளியிட்டார். மேலும் இந்த சீரியலுக்கு Audition நடப்பதாகவும், அதில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. தற்போது இந்த சீரியலுக்கான ஆடிசன் நடந்து முடிந்துள்ளது.
டாஸ்க்கில் எல்லை மீறும் போட்டியாளர்கள்.. பிக்பாஸ் எடுத்த அதிரடி முடிவு – “பிக்பாஸ்” முதல் ப்ரோமோ!
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இந்நிலையில் இந்த சீரியல் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதில், அவர் இதுவரை சன் டிவியில் புதிய சீரியல் இயக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில் தற்போது அதில் மாற்றம் நடந்துள்ளது. அதாவது அவர் சன் டிவிக்கு பதிலாக கலைஞர் டிவியில் புது சீரியல் தொடங்க இருப்பதாக உறுதியான தகவல் வெளியாகி இருக்கிறது. அதனால் ரசிகர்கள் சற்று அதிர்ச்சியில் இருக்கின்றனர்.