புது சீரியலில் என்ட்ரி கொடுக்க இருக்கும் பிரபல நடிகர் கார்த்திக் ராஜ் – ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவியின் Office சீரியல் மூலமாக ஏகப்பட்ட ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் நடிகர் கார்த்திக் ராஜ். அவர் சில தனிப்பட்ட காரணங்களால் ஹிட் தொடரான செம்பருத்தி சீரியலை விட்டு விலகினார். இந்நிலையில் அவர் மீண்டும் சீரியலில் என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாக இருக்கிறது.
நடிகர் கார்த்திக் ராஜ்:
தமிழ் சின்னத்திரையில் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருந்தவர் நடிகர் கார்த்திக் ராஜ். அவர் விஜய் டிவியின் ஆபிஸ் சீரியல் மூலமாக அறிமுகமானவர். அதன் பின் ஜீ தமிழில் செம்பருத்தி சீரியலில் ஆதி கதாபாத்திரத்தில் களமிறங்கினார். அவரும் நடிகை ஷபனாவும் இணைந்து நடிக்கும் காதல் காட்சிகளுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தனர். அவர் நடிக்கும் போது அந்த சீரியல் TRP-யில் டாப் இடத்தில் இருந்தது. ஆனால் அவர் சில காரணங்களால் சீரியலை விட்டு விலகினார்.
அதன் பின் அந்த சீரியல் TRP-யில் பெரும் சரிவை கண்டது. அவர் கே ப்ரொடியூசன் தயாரிப்பில் படம் ஒன்றை எடுத்திருப்பதாகவும், அதனை வெளியிட பணம் இல்லாமல் ரசிகர்களிடம் பணம் கேட்ட வீடியோ ஒன்று அதன் பின் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் அவர் சீரியலில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் பல முறை கோரிக்கை வைத்தனர். ஆனால் அவர் என்ட்ரி கொடுக்கவில்லை. தற்போது கார்த்திக் ராஜ் மீண்டும் புது சீரியலில் நடிக்க வேண்டும் என, சீரியல் குழுவினர் அவரை அணுகியதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கொஞ்சம் கொஞ்சமாக சொத்து சேர்த்து பிரம்மாண்ட வீடு கட்டிய விஜய் டிவி பிரபலம் – குவியும் வாழ்த்துகள்!
Exams Daily Mobile App Download
அதற்கு அவரும் ஒப்புக் கொண்டார் எனவும், ஆனால் அவர் நடித்த படத்தை வாங்கி கொண்டால் தான் சீரியலில் நடிக்க சம்மதிப்பேன் என கண்டிஷன் போட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதற்கு சீரியல் குழுவினர் சம்மதம் தெரிவித்ததாகவும், விரைவில் கார்த்திக் ராஜ் ஜீ தமிழில் என்ட்ரி கொடுப்பார் என்ற செய்தி வெளியாகி இருக்கிறது. அதனால் அவருடைய ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்