தனத்தின் பிறந்த நாளை சர்பிரைஸாக கொண்டாட திட்டமிடும் குடும்பம் – இன்றைய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ எபிசோடு!
கயலுக்காக மூர்த்தி செய்த விஷயத்தை பார்த்து மீனா சந்தோசப்படுகிறார். தொடர்ந்து தனத்தின் பிறந்தநாளை இந்த முறை சர்பிரைஸ் ஆக கொண்டாட வேண்டும் என கண்ணன் திட்டமிட்டு கொண்டிருக்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில், கயலுக்காக பணத்தை சேமிக்க வேண்டும் என கதிர் மற்றும் ஜீவாவிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார் மூர்த்தி. அப்போது, அண்ணனே இல்லை என்றாலும் உண்டியலில் பணம் போடுவதை நிறுத்தக் கூடாது என்று மூர்த்தி சொல்ல தனம், கதிர், ஜீவா அனைவரும் பதறிவிடுகின்றனர். தொடர்ந்து, கயலின் எதிர்காலத்தை நாம் தான் பார்க்க வேண்டும். அதனால் ஒரு அம்மாவாக கயலுக்கு நீ என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீயோ அதை செய் மீனா என்று மூர்த்தி சொல்கிறார். பிறகு, கண்ணனும் வேலைக்கு போய் கயலுக்காக எதையாவது செய்ய வேண்டும் என்று சொல்ல மீனா சந்தோஷப்படுகிறார்.
தொடர்ந்து, மூர்த்தி மாமா செய்தது நல்ல விஷயம் தான். இந்த பணத்தை வைத்து கயலின் அடுத்த பிறந்த நாளுக்கு நகை வாங்க வேண்டும். ஆனால் நான் சண்டை போட்டதால் தான் இப்படி நடந்தது என்று சொல்லாத என ஜீவாவிடம் பேசிக் கொண்டிருக்கிறா மீனார். பிறகு, கடையில் வைத்து அண்ணன், தம்பிகள் மூவரும் பேசிக்கொண்டிருக்க அவர்களை பார்ப்பதற்காக ஜனார்த்தனன் வருகிறார். தொடர்ந்து, முல்லையின் சிகிச்சைக்காக 50 ஆயிரம் ரூபாயை கந்து வட்டிக்கு வாங்கி கடனை கேட்டு வந்ததாக கூறுகிறார் ஜெகா. ஆனால், என்ன அவசரமாக இருந்தாலும் அவரிடம் எல்லாம் எதற்காக பணம் வாங்குகிறீர்கள்.
என்னிடம் கேட்கலாமே என்று ஜனார்த்தனன் பேசுகிறார். மறுபக்கத்தில், வீட்டில் வைத்து தனம், முல்லை, ஐஸ்வர்யா மூவரும் சென்னை ட்ரிப் குறித்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். அப்போது, அங்கு வரும் கண்ணன் தனக்கு இம்மாதம் ரிசல்ட் வரும் என ஐஸ்வர்யாவிடம் கூறுகிறார். தொடர்ந்து தேதி பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது மே 25ம் தேதி தனத்திற்கு பிறந்தநாள் என கண்ணன் கூறுகிறார். உடனே எல்லாரும் அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்து சொல்கிறார்கள்.
Exams Daily Mobile App Download
தொடர்ந்து, தனத்தின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று அனைவரும் சொல்ல, தனத்திற்கு பேனர் அடிக்க வேண்டும் மீனா சொல்கிறார். பிறகு, இந்த முறை தனத்தின் பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாட வேண்டும் என முல்லை கூறுகிறார். மறுநாள் காலையில் பேப்பர் படிக்கும் போது, அதில் நல்ல செய்திகளை விட கெட்ட செய்திகள் தான் அதிகம் இருக்கிறது என மூர்த்தி புலம்பிக் கொண்டிருக்கிறார். அவரை கண்ணன் கலாய்க்க, ஒழுங்கா பேப்பர் படித்து அறிவை வளர்த்துக்கொள் என மூர்த்தி மற்றும் ஜீவா இருவரும் கண்ணனுக்கு அட்வைஸை போடுவதுடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.