மாநில அரசின் குடும்ப ஓய்வூதியம் குறித்து தொடரப்பட்ட வழக்கு – உயர்நீதிமன்றம் ரத்து!
பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் மாநில அரசின் குடும்ப ஓய்வூதிய திட்டம் குறித்து தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் அதிரடி பதிலை அளித்துள்ளது.
குடும்ப ஓய்வூதியம்:
மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், அவர்களது பணி நிலை மற்றும் மாத ஓய்வூதியத்திற்கு ஏற்றவாறு ஓய்வூதியம் அளிக்கப்படுகிறது. ஓய்வூதியதாரர் மறைவிற்க்கு பின்னால் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் பலன் பெரும் வகையில் குடும்ப ஓய்வூதிய திட்டம் உள்ளது. குடும்ப ஓய்வூதிய விதிகளில் மாற்றத்தை கொண்டு வர வேண்டி பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது.
Exams Daily Mobile App Download
அதாவது, ஓய்வூதியம் பெறும் பணியாளரை சார்ந்திருக்கும் பெற்றோர், ஓய்வூதியம் பெறுவோர் மறைவிற்கு பிறகு பாதிக்கப்படுவதால், ஓய்வூதியம் பெற பெற்றோருக்கும் உரிமை உண்டு என்று உத்தரவிட அந்த மனுவில் கேட்கப்பட்டிருந்தது.மேலும் அதற்கு பணியாளரை திருமணம் ஆகாதவர் என்று குறிப்பிட வேண்டும் என்றும் கேட்கப்பட்டிருந்தது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டை தடை செய்ய மனு தாக்கல் – அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? முதல்வர் இன்று ஆலோசனை!
Follow our Instagram for more Latest Updates
ஆனால், வழக்கை விசாரித்த நீதிபதிகள், குடும்ப ஓய்வூதியத் திட்டம், 1964 இன் உட்பிரிவு 4 (ii) இன் உட்பிரிவு (எஃப்) இல் “திருமணமாகாதவர்” என்ற அறிவிப்பு இருக்க வேண்டும். திருமணம் ஆன பின்னர் பெற்றோர்கள் குடும்பத்தினர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்கள். இதனால் குடும்ப ஓய்வூதியத்தில் மனைவி, குழந்தைகளுக்கு தான் முன்னுரிமை இருப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.