மத்திய அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – குடும்ப பென்சன் குறித்த முக்கிய அறிவிப்பு! அரசின் உத்தரவு!

0
மத்திய அரசு ஊழியர்கள் கவனத்திற்கு - குடும்ப பென்சன் குறித்த முக்கிய அறிவிப்பு! அரசின் உத்தரவு!
மத்திய அரசு ஊழியர்கள் கவனத்திற்கு - குடும்ப பென்சன் குறித்த முக்கிய அறிவிப்பு! அரசின் உத்தரவு!
மத்திய அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – குடும்ப பென்சன் குறித்த முக்கிய அறிவிப்பு! அரசின் உத்தரவு!

மத்திய அரசு ஊழியர்களுக்கு பல்வேறு வகையான சலுகைகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கான குடும்ப ஓய்வூதியம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பான தகவல்களை பற்றி பார்ப்போம்.

குடும்ப பென்சன்:

இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்வு, சம்பள உயர்வு, வீட்டு வாடகைப்படி உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து தற்போது மத்திய அரசு ஊழியர்கள் 34% அகவிலைப்படி பெற்று வருகின்றனர். ஓர் ஆண்டுக்கு இரு முறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுவதால் இந்த ஆண்டு மீண்டும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து தற்போது குடும்ப ஓய்வூதியம் குறித்து மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி & நிலுவைத்தொகை – வலுக்கும் கோரிக்கை!

இவர் கூறியதாவது, மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஆனால் பல்வேறு வங்கிகளில் இவர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் கொடுக்கப்படுவதில்லை என்று புகார்கள் வந்துள்ளது. அதனால் அவர்கள் பொருளாதார ரீதியில் பல்வேறு பிரச்சனைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இவர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டுமெனில் குழந்தைகளிடம் இருந்து நீதிமன்றத்தால் வழங்கப்படும் பாதுகாவலர் சான்றிதழ் கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும் என்று வங்கிகளில் கூறப்படுகிறது.

Exams Daily Mobile App Download

ஆனால் தற்போது அவர்கள் பாதுகாவலர் சான்றிதழ் இல்லாவிட்டாலும் அவர்களுக்கு வழங்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். அத்துடன் இதனை மீறி வழங்காமல் இருக்கும் வங்கிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஓய்வூதியம் தொடர்பான அறிவுறுத்தல்கள் வங்கிகளின் நிர்வாக இயக்குநர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து இவர்களுக்கு ஓய்வூதிய வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று மையப்படுத்தப்பட்ட ஓய்வூதியச் செயலாக்க மையம், ஓய்வூதியம் செலுத்தும் கிளை உள்ளிட்டவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!