அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
இந்தியாவில் மறைந்த அரசு ஊழியர்களின், மன நலம் பாதிக்கப்பட்ட வாரிசுகளுக்கு குடும்ப ஓய்வூதியம் பெற தகுதி உடையவர்கள் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த குடும்ப ஓய்வூதியம் தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது
முக்கிய அறிவிப்பு:
இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி அதிவேகமாக ஏழ்மையை ஒழித்து வருகிறது என்று முன்னணி சர்வதேச அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன. மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட, ஏழைகள் நலன் சார்ந்த பல திட்டங்களால் இது சாத்தியமாகியுள்ளது. இந்த வகையில் உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டமான, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தைக் கொண்டதாக இந்தியா இருக்கிறது. இதனை தொடர்ந்து மறைந்த அரசு ஊழியரின் வாரிசுகள் மனநலம் பாதிக்கப்பட்ட இருந்தால், அவர்கள் குடும்ப ஓய்வூதியம் பெற தகுதி உடையவர்கள் என, மத்திய அரசு அறிவித்துள்ளது.
Post Office இல் தினமும் ரூ.150 சேமித்தால் 20 லட்ச ரூபாய் ரிட்டன்ஸ் – அருமையான சேமிப்பு திட்டம்!
இந்த அறிவிப்பு அடிப்படையில் மத்திய ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங், செய்தியாளர்களிடம் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அந்த வகையில் அரசு ஊழியர்களின் மனநல பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய குடும்ப ஓய்வூதிய தொகையை, கொடுப்பதில் ஒரு சில வங்கிகள் பல் கெடுபிடிகள் செய்வதாக புகார் எழுந்துள்ளது. இந்த புகார் அடிப்படையில் விசாரித்தபோது, ஒரு சில வங்கிகள் நீதிமன்றத்தில் இருந்து பாதுகாவலர் சான்று வாங்கி வந்தால் தான் குடும்ப ஓய்வூதிய தொகை, மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு தரப்படும் என நிபந்தனைகள் வைக்கின்றன.
தமிழக அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – புதிய விதிமுறைகள் அமல்!
இந்த நிபந்தனை விதி மத்திய அரசு சேவை சார்ந்த ஓய்வூதிய சட்டத்திற்கு எதிரானது என்று குறிப்பிட்டுள்ளார். எனவே மறைந்த அரசுப் பணியாளர் யாரை வாரிசுதாரராக நியமித்து உள்ளாரோ, அவர் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தால் கூட, குடும்ப ஓய்வூதியம் வழங்க வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த உத்தரவை சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு பிறப்பிக்கும்படி, ஓய்வூதியம் வழங்கும் வங்கிகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாக இயக்குனர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர் என மத்திய ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத் துறை அமைச்சர் கூறினார்.