கோபியை வீட்டை விட்டு துரத்திவிட்ட குடும்பத்தினர் – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் அதிர்ச்சி!
பாக்கியாவை கைது செய்து போலீசார் சிறையில் வைத்திருந்த நிலையில் கூட கோபி உதவிக்கு வரவில்லை. இதனால், கோபியின் அம்மா கடுப்பாகி கோபியை வீட்டைவிட்டு விரட்டும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. பாக்கியாவினை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை கோபி திருமணம் செய்துகொள்வாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு தடவையும் பாக்கியாவின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு கோபி தப்பித்துக்கொண்டே தான் இருக்கிறார். கோபி பாக்கியாவின் கண் முன் தவறு செய்தும் கூட பாக்கியாவால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இயற்கையாகவே கருவுற்ற முல்லை – ஆச்சரியத்தில் கதிர்! குடும்பத்தினர்கள் மகிழ்ச்சி!
மயூ பிறந்தநாளுக்காக 100 பேருக்கு சமைத்து கொடுக்கும்படி ராதிகா பாக்கியாவிடம் ஆர்டர் கொடுத்திருந்தார். பாக்கியா சமைத்து கொடுத்த சாப்பாட்டை சாப்பிட விடாமல் ராதிகா மற்றும் மயூவை கோபி ஹோட்டலுக்கு அழைத்து செல்கிறார். பாக்கியா சமைத்து கொடுத்த சாப்பாட்டை சாப்பிட்ட அனைத்து குழந்தைகளுமே மயக்கம் போட ஆரம்பித்திருக்கின்றனர். இதனால் பாக்கியா தான் அந்த உணவில் நஞ்சை கலந்திருப்பார் என கூறி பாக்கியாவை போலீசார் கைது செய்கின்றனர். ஆர்டர் கொடுத்தவரையும் விசாரிக்க வேண்டும் என்பதற்காக ராதிகாவையும் போலீசார் அதே காவல் நிலையத்திற்கு கூட்டி சென்றுவிட்டனர்.
பிரபல சீரியல் நாயகனை கரம் பிடித்த செய்தி வாசிப்பாளர் கண்மணி – ரசிகர்கள் வாழ்த்து மழை!
பாக்கியாவை வெளியே கொண்டு வர குடும்பத்தில் உள்ள அனைவருமே கோபிக்கு கால் செய்கின்றனர். ராதிகாவும் தொடர்ந்து கோபிக்கு கால் செய்துகொண்டே தான் இருக்கிறார். ஆனால், பாக்கியாவும், ராதிகாவும் காவல் நிலையத்தில் இருப்பதை அறிந்துகொண்டு கோபி யாரின் காலையும் அட்டென்ட் செய்யவே இல்லை. பின்பு, எழில் தான் பாக்கியா மீது எந்த தவறும் இல்லை என்பதை நிரூபித்து வெளியே கூட்டி வருகிறார். பிரச்சனையெல்லாம் ஓய்ந்த பிறகு கோபி வீட்டிற்கு வருகிறார். அப்போது, கோபியின் அம்மா உனது மனைவி பிரச்சனையில் இருக்கும் போது நீ அவளுக்கு துணையாக இல்லை. இதற்கு மேல் உனக்கு இந்த வீட்டில் இடம் கிடையாது என கூறி சண்டைபோடும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.