தமிழகத்தில் கோயில்களின் பெயரில் போலி இணையதளம் – உயர்நீதிமன்ற மதுரை கிளையின் அதிரடி உத்தரவு!!

0
தமிழகத்தில் கோயில்களின் பெயரில் போலி இணையதளம் - உயர்நீதிமன்ற மதுரை கிளையின் அதிரடி உத்தரவு!!
தமிழகத்தில் கோயில்களின் பெயரில் போலி இணையதளம் - உயர்நீதிமன்ற மதுரை கிளையின் அதிரடி உத்தரவு!!
தமிழகத்தில் கோயில்களின் பெயரில் போலி இணையதளம் – உயர்நீதிமன்ற மதுரை கிளையின் அதிரடி உத்தரவு!!

தமிழகத்தில் கோவில்களின் பெயர்களில் தனி நபர்கள் போலியான இணையதளங்களை உருவாக்கியுள்ளனர். இந்த வலைதளங்களை பயன்படுத்தி பல்வேறு மோசடிகள் நடைபெற்று வருகிறது இந்த நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளை முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

போலி இணையதளங்கள்:

இந்தியாவில் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தால் போலியான இணையதளங்கள் அதிக அளவில் உருவாகி விட்டது. மக்களை ஏமாற்றும் நோக்குடன் பல நபர்கள் போலியான இணையதளங்களை தொடங்கி அதன் வாயிலாக பணம் பறித்தல், வங்கி வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்களை கையாடல் போன்ற மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இனி ஆந்திராவின் புதிய தலைநகர் ‘விசாகப்பட்டினம்’ தான் – முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தகவல்!

அந்த வரிசையில் தற்போது தமிழக திருக்கோயில்களில் பெயரில் தனி நபர்கள் போலியான இணையதளங்களை தொடங்குவது அதிகரித்துள்ளது. இதன் வாயிலாக பக்தர்களிடம் இருந்து பல்வேறு காரணங்களை கூறி ஆன்லைன் வாயிலாக காணிக்கை வசூலிக்கின்றனர். இந்த காணிக்கையானது கோயில்களுக்கு செல்வதில்லை. கடந்த வருடம் இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

தற்போது விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது தமிழகத்தில் உள்ள பிரபல கோயில்களில் பெயரில் தனி நபர்களால் இயக்கப்பட்டு வரும் போலியான இணையதளங்களை முடக்குமாறு சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!