ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் போலி ரிவ்யூ – மத்திய அரசின் அதிரடி நடவடிக்கை!
ஆன்லைன் வணிக தளங்களில் போலியான மதிப்புரைகள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படுகிறார்கள். இதனை தடுக்க மத்திய அரசு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.
புதிய விதிகள்:
இந்தியாவில் ஆன்லைன் வணிக தளங்கள் அதிகரித்து விட்டது. இதனை பயன்படுத்தி தற்போது மக்கள் வீட்டிலிருந்தே அனைத்து பொருட்களையும் பெற்று வருகின்றனர். இவ்வாறு பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் இணையதளத்தில் கமெண்ட் கொடுக்கின்றனர். இந்த கமெண்ட் மற்றும் ரேட்டிங் தான் அந்த பொருள் மீதான நம்பக தன்மையை அதிகரிக்கிறது.
தமிழகத்தில் TNUSRB எழுத்துத்தேர்வு – இன்று துவக்கம்! சிறப்பு பேருந்து வசதி ஏற்பாடு!
இந்த நிலையில் ஆன்லைன் வணிக தளங்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் நற்பெயரை பெறும் நோக்கில் மூன்றாம் தரபினர்களிடம் இருந்து கருத்துக்களை பணம் கொடுத்து பதிவிடுகின்றனர். இவ்வாறு செய்வதனால் மக்கள் மதிப்பு இல்லாத தரம் குறைந்த பொருட்களை அதிக விலைக்கு வாங்கி வாடிக்கையாளர்கள் ஏமாறுகின்றனர். சமீப காலமாக இது போன்ற போலி மதிப்புரைகள் மற்றும் மதிப்பீடுகள் அதிகரித்து வருகிறது.
Follow our Instagram for more Latest Updates
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இதனை தடுக்க மத்திய அரசு இ -வணிக நிறுவனங்களுக்கு புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது. இந்த விதிகள் இன்று முதல் அமலுக்கு வரவுள்ளது. இனி ஏதேனும் இணையதளம் போலியான மதிப்புரைகளைக் பதிவிட்டுள்ளது கண்டறியப்பட்டால் அது நியாயமற்ற வர்த்தகமாக கருதப்பட்டு நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.