தமிழகத்தில் போலி பத்திரப்பதிவு ரத்து மசோதா – கவர்னர் ஒப்புதல்!
தமிழகத்தில் போலி பத்திரங்களை ரத்து செய்யும் உரிமை தொடர்பான புதிய சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், கவர்னர் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
போலி பத்திரப்பதிவு ரத்து:
தமிழகத்தில் சமீப காலத்தில் போலி பத்திரங்கள் தொடர்பான புகார்கள் அதிக அளவில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதனால் சாமானிய மக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். பலம் பொருந்தியவர்கள் போலி பத்திரங்களின் மூலம் எளியவர்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான பல இடங்களை அபகரித்து வருகின்றனர். இது தொடர்பான முறையீடுகள் பத்திரப்பதிவு துறையில் அளிக்கப்பட்டது. இதனால் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் இதற்கான சட்ட திருத்த மசோதாவை பேரவையில் தாக்கல் செய்தார்.
இதன் மூலம், யாரேனும் போலி பத்திரத்தை பதிவு செய்திருந்தால் அதை பத்திரப் பதிவாளர் மற்றும் டிஐஜிக்கள் நீக்கம் செய்ய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக போலி பத்திரத்தை ரத்து செய்ய நீதிமன்றம் சென்று மட்டுமே ரத்து செய்ய முடியும் என்ற நிலை இருந்தது. சட்ட திருத்தத்தின் படி, போலி பத்திரம் பதிவு செய்யப்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கவும், அபராதம் வசூலிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மாணவர்களை காப்பது அரசின் கடமை – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிக்கை!
தமிழக அரசின் போலி பத்திரப்பதிவு ரத்து தொடர்பான சட்ட திருத்தத்திற்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இந்த சட்டத்திருத்தம் மத்திய அரசின் சட்டத்துறை அமைச்சகம் ஒப்புதல் பெற்று, பாராளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்படுகிறது. மேலும், குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெட்ரா பிறகு சட்ட திருத்தும் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த சட்ட திருத்தினால் பலரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அரசு பத்திரப்பதிவு துறை தொடர்பான இன்னும் சில திட்டங்களையும் அறிவித்தது.