தமிழகத்தில் அதிகரிக்கும் போலி ரேஷன் கார்டுகள்? அரசு நடவடிக்கை!
நாடு முழுவதும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு மலிவு விலையில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் போலி ரேஷன் கார்டுகள் குறித்து அரசு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.
ரேஷன் கடைகள்:
இந்தியாவில் உள்ள ஏழை,எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மலிவான விலையில் உணவு பொருட்கள் நியாயவிலை கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் நாட்டில் 2 கோடிக்கும் அதிகமான மக்கள் பயனடைந்து வருகின்றனர். இத்தகைய ரேஷன் கடைகளில் உணவு பொருட்கள் தவிர அரசின் அனைத்து சலுகைகள் மற்றும் உதவி தொகைகளும் வழங்கப்படுகின்றன. இதற்கிடையில் மக்களின் வசதிக்காக ரேஷன் கடைகளில் பல புதிய மாறுதல்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதாவது கண்காணிப்பு கேமரா பொருத்தும் திட்டம், ஆன்லைன் மூலம் ரேஷன் கடை பற்றிய விவரங்கள் தெரிந்து கொள்ளுதல் போன்ற பல செயல்முறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
இதை தவிர ரேஷன் கடைகளில் நடைபெறும் ஊழல்களை கண்டுபிடிக்க தனிப்படைகள் அமைத்து அரசு கண்காணித்து வருகிறது. மேலும் ரேஷன் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு என்று தனிப்பட்ட விதிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழகத்தில் 2 கோடியே 60 லட்சம் ரேஷன் கார்டுகள் செயல்பாட்டில் உள்ளன. இத்துடன் ஆதார் எண் விவரம் மற்றும் கைரேகை பதிவு மூலம் கணினி மயமாக்கப்பட்டு தொலைபேசி எண்களும் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், தற்போது அனைத்து ரேஷன் கடைகளிலும் குடும்ப அட்டையில் உள்ள நபர்கள் மட்டுமே நேரில் வந்து பொருள் வாங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.
SBI வங்கி சேவைகளை வீட்டில் இருந்தே பெறலாமா? எளிய வழிமுறைகள் இதோ!
இதன் மூலம் தற்போது போலி ரேஷன் அட்டைகள் பயன்படுத்துபவர்களை எளிதாக கண்டறிய முடிகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் 13 லட்சத்து 12 ஆயிரம் பேர் கடந்த மூன்று மாதங்களாக ரேஷன் பொருட்கள் வாங்காமல் இருப்பது கணக்கெடுப்பின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தனை லட்சம் பேர் ரேஷன் பொருட்கள் வாங்காமல் இருப்பது குறித்து விசாரிக்க உணவு பொருள் பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு விசாரிப்பதன் மூலம் போலி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களை எளிதில் கண்டுபிடிக்க முடியும் என்று ரேஷன் கடை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்