தமிழ் நடிகர் சித்தார்த் மறைவு என ட்வீட் – ‘வெறுப்பின் உச்சம்’ நொந்து போய் வெளியிட்ட பதிவு!
தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக வலம் வந்தவர் நடிகர் சித்தார்த், தற்போது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் அவர் அரசியல் ரீதியான பல கருத்துக்களை தெரிவிப்பதால் அவருக்கு நெகட்டிவ் கமெண்ட்கள் அதிகமாக வருகிறது. இந்நிலையில் அவர் இறந்து விட்டதாக வெளியான போஸ்ட் ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கண்டனம் தெரிவித்துள்ளார்.
நடிகர் சித்தார்த்:
தமிழ் சினிமாவில் 2003 ஆம் ஆண்டு வெளியான பாய்ஸ் திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார். அவர் நடிகர் மட்டுமல்லாமல் பாடகரும் கூட. சமீபத்தில் அவருக்கு எந்த படங்களும் இல்லாத நிலையில் சமூக வலைத்தளங்களில் செம ஆக்டிவாக இருக்கிறார். திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் சித்தார்த் அரசியல் ரீதியாக பல கருத்துக்களை கூறி அவ்வப்போது சிக்கலில் சிக்கிக் கொள்கிறார்.
‘நாம் இருவர் நமக்கு இருவர்’ பிரபல நடிகருக்கு ஆண் குழந்தை – ரசிகர்கள் வாழ்த்து!!
அதனால் அவர் மீது கடும் விமர்சனங்களை முன்வைப்பவர்கள் ஏராளம். இந்நிலையில் சித்தார்த் இறந்துவிட்டதாக வைரலான புகைப்படம் ஒன்றை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அத்துடன் “குறிப்பிட்டவர்களின் வெறுப்பு மற்றும் தொல்லை. இதில் நாம் எதற்கு குறைக்கப்பட்டுள்ளோம்” என பதிவிட்டுள்ளார். இந்நிலையில் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 13வது சீசனில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற இந்தி நடிகர் சித்தார்த் நேற்று மாரடைப்பால் இறந்துவிட்டார்.
TN Job “FB Group” Join Now
அது தெரியாமல் இவர் என நினைத்து தவறுதலாக இது நடைபெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தி நடிகர் சித்தார்த்திற்கு 40 வயதே ஆகிறது. இரவு சில மாத்திரைகளை சாப்பிட்டு விட்டு தூங்கிய அவர் காலை எந்திரிக்கவே இல்லை எனவும், அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. அவருக்கு ஹிந்தி திரையுலகினர் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.