தமிழகத்தில் சமூக வலைதளத்தில் மின்கட்டணம் குறித்து போலியான தகவல்? அமைச்சர் எச்சரிக்கை!
தமிழகத்தில் சமூக வலைதளங்களில் மின் கட்டணம், மின் விநியோகம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்பி வருவதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இது போன்று தவறான தகவல்களை பரப்புவோர் மீது புகார் தெரிவிக்கலாம் என்று அமைச்சர் அறிவித்துள்ளார்.
பொதுமக்கள் கவனத்திற்கு
சென்னையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நேற்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் அவர் செய்தியாளர் சந்திப்பில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, சமூக வலைதளங்களில் மின்கட்டணம், மின்விநியோகம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்பி வருவதாக தெரிவித்துள்ளார். அத்துடன் அதிமுக நிர்வாகி ஒருவர் மின்வாரியத்திற்கு ஒரு மாத காலமாக தொடர்பு கொண்டும் பதிலளிக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். இதனை பற்றி தெரிந்து கொள்ள அவரின் சர்வீஸ் எண்ணை பெற்றுக்கொண்டதாக கூறியுள்ளார்.
Exams Daily Mobile App Download
ஆனால் அவரின் சர்வீஸ் எண்ணை பயன்படுத்தி ஆய்வு செய்ததில் இவர் 2 முறை மட்டுமே தொடர்பு கொண்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். அத்துடன் இதற்குரிய தெளிவான காரணமும் மின்வாரியத்திடமிருந்து கேட்டறியப்பட்டுள்ளது. மேலும் இது போன்று சமூக வலைதளங்களில் இல்லாத கட்டணத்தை இருப்பதாகவும், மின் விநியோகம் பாதிப்பு இல்லாத இடங்களில் பாதிப்பு இருப்பதாக புகார் தெரிவித்துள்ளனர். இது போன்ற போலியான தகவல்களை பரப்புவர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் சிறும்பான்மையின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!
மேலும் இவர் கூறியிருப்பதாவது, மின் கட்டணம் அல்லது மின் விநியோகம் செய்வது தொடர்பாக ஏதேனும் போலியான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். இனிமேல் இது போன்ற அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க தவறான தகவல்களை பெற்றால் அவர்கள் மீது மின்வாரியம் புகார் அளிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது என்று போலியான தகவல்களை பரப்புபவர்களை எச்சரித்துள்ளார். மேலும் தமிழகத்தில் வீடுகளுக்கான நிலை கட்டணம் ரத்து செய்யப்பட்டு விட்டதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.