10 வது தேர்ச்சி பெற்ற ஆண்களுக்கான மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்..!
உரங்கள் மற்றும் ரசாயனங்கள் திருவாங்கூர் லிமிடெட் (FACT) ஆனது கடந்த சில நாட்களுக்கு முன் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Nurse, Cook and Bearer ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, ஊதியம் போன்ற தகவல்கள் எளிமையாக தொகுத்துள்ளோம்.
FACT வேலைவாய்ப்பு விவரங்கள்:
- உரங்கள் மற்றும் ரசாயனங்கள் திருவாங்கூர் லிமிடெட்டில் (FACT) காலியாக உள்ள Nurse, Cook and Bearer ஆகிய பணிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
- Nurse பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி / கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு மற்றும் General Nursing பாடப்பிரிவில் Diploma Degree முடித்தவராக இருக்க வேண்டும்.
- Cook and Bearer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி / கல்வி நிலையங்களில் 10 வகுப்பு தேர்ச்சி மற்றும் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட Food Craft நிறுவனங்களில் சான்றிதழ் பெற்றவராக இருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 1 வருடம் முதல் அதிகபட்சம் 5 வருடம் வரை அனுபவம் உள்ளவராக இருக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
- இப்பணிகளுக்கு ஆண்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
- இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 35 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- Nurse பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.20,000/- மாத சம்பளமாக பெறுவார்கள்.
- Cook and Bearer பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.18,000/- மாத சம்பளமாக பெறுவார்கள்.
- இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Shortlist செய்யப்பட்டு தேர்வு குழு பரிந்துரை செய்யும் தேர்வு முறைகளின் படி (எழுத்து தேர்வு, நேர்காணல், திறன் தேர்வு) தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
FACT விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் Online-ல் 10.06.2022 ம் தேதிக்குள் பதிவு செய்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 20.06.2022 என்ற நாளுக்குள் தபால் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதால், நாளைக்குள் தங்களின் விண்ணப்பங்களை தபால் செய்ய கேட்டுக் கொள்கிறோம்.