Facebook செயலியின் பெயர் மாற்றம்? பயனர்கள் அதிர்ச்சி!
சமூக வலைத்தளத்தில் முன்னிலை வகித்து வருவது பேஸ்புக் நிறுவனம். தற்போது பேஸ்புக் நிறுவனத்தின் பெயர் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பேஸ்புக்:
கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்து வந்த நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மக்கள் வீட்டிலேயே முடங்கி இருந்ததன் காரணமாக சமூக வலைத்தளங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அந்த வகையில் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்திய சமூக வலைத்தளத்தில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது பேஸ்புக், WhatsApp, இன்ஸ்டாகிராம். இந்நிலையில் தற்போது பேஸ்புக் நிறுவனத்தின் பெயர் மாற்றப்பட உள்ளதாக தி வேர்ஜ் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் கவனத்திற்கு – அக்.22 கடைசி நாள்!
மேலும் பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், பெயர் மாற்றுவது குறித்த முடிவை நிறுவனத்தின் வருடாந்திர இணைப்பு மாநாட்டில் தெரிவிக்க திட்டமிட்டிருப்பதாகவும் இந்த மாநாடு அக்டோபர் 28ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து யூகங்கள், வதந்திகளுக்கு பதிலளிக்க முடியாது என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள பயனர்களை ஒன்றிணைக்கும் செயலியாக பேஸ்புக் இயங்கி வருகிறது.
தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு மாதம் ரூ.5000? அரசுக்கு கோரிக்கை!
தற்போது பேஸ்புக் தாய் நிறுவனத்தின் கிளை நிறுவனமாக இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் முதலியன இயங்கி வரும் நிலையில் பேஸ்புக் பெயர் மாற்றப்படும் பட்சத்தில் மற்ற சமூக வலைத்தளம் போல் இதுவும் தாய் நிறுவனத்தின் கீழ் செயல்படும் கிளை நிறுவனமாக மாறும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் பேஸ்புக் நிறுவனத்திற்கு பெயர் மாற்றம் செய்யப்படுமா? என்ற ஆவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பினை பேஸ்புக் நிறுவனம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.