533 மில்லியன் FaceBook பயனர்களின் தகவல்கள் கசிவு – மெட்டாவிற்கு ரூ.276 மில்லியன் அபராதம்!
சமூக வலைத்தளமான பேஸ்புக் தனது தனியுரிமைக் கொள்கையை மீறி 533 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களின் டேட்டாக்களை கசிய விட்டதாக புகார்கள் எழுந்தது. இதனையடுத்து அயர்லாந்து தரவு பாதுகாப்பு அமைச்சகம் மெட்டாவிற்கு அபராதம் விதித்துள்ளது.
அபராதம்:
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் சமூக வலைத்தளமான பேஸ்புக்கை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு 106 நாடுகளைச் சேர்ந்த 533 மில்லியன் பேஸ்புக் பயனர்களின் பெயர், இருப்பிடம், மொபைல் எண் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்கள் ஹேக்கர்களின் தளத்தில் வெளியானது. இது பேஸ்புக் பயனர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது மிகப்பெரிய விதி மீறல்களில் ஒன்றாக பார்க்கப்பட்டது.
Follow our Instagram for more Latest Updates
இது குறித்து அயர்லாந்தின் தரவு பாதுகாப்பு ஆணையம் விசாரணை மேற்கொண்டது. அதனை தொடர்ந்து ஐரோப்பாவின் பொதுத் தரவு பாதுகாப்பு ஒழுங்குமுறை (GDPR) பேஸ்புக் தகவல்களை வெளியிட்டதா அல்லது ஹாக்கிங் செய்யப்பட்டதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டது. இதனையடுத்து அயர்லாந்தின் தரவு பாதுகாப்பு ஆணையம் 533 மில்லியன் பயனர்களின் தகவல்களை கசிய விட்டதற்காக மெட்டாவிற்கு 276 மில்லியன் அபராதம் விதித்துள்ளது.
நகை வாங்க Correct-ஆன டைம் இது.. தங்கம் விலை திடீர் சரிவு – மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்!
Exams Daily Mobile App Download
இது இந்த ஆண்டு மெட்டா மீது விதிக்கப்படும் மூன்றாவது அபராதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே 30 மில்லியன் பேஸ்புக் பயனர்களின் தகவல்களை வெளியிட்டதற்காக கடந்த 2018ம் ஆண்டு 1.6 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்ஸ்டாகிராமில் 18 வயதிற்குட்பட்ட பயனர்களின் தரவை பயன்படுத்தியது தொடர்பாக 402 மில்லியன் அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.