2021 ஆண்டு டிசம்பர் வரை வீட்டில் இருந்தே வேலை – பேஸ்புக் நிறுவனம் அறிவிப்பு!

0
2021 ஆண்டு டிசம்பர் வரை வீட்டில் இருந்தே வேலை - பேஸ்புக் நிறுவனம் அறிவிப்பு!
2021 ஆண்டு டிசம்பர் வரை வீட்டில் இருந்தே வேலை - பேஸ்புக் நிறுவனம் அறிவிப்பு!
2021 ஆண்டு டிசம்பர் வரை வீட்டில் இருந்தே வேலை – பேஸ்புக் நிறுவனம் அறிவிப்பு!

கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் உலகின் பல முன்னணி நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை வீட்டில் இருந்தே பணிபுரிய ஊக்குவித்து வருகின்றன. அதற்கு ஒரு படி மேலே போய் கொரோனாவுக்கு பிறகும் ஊழியர்கள் அனைவரும் வீட்டிலிருந்தே பணிபுரியலாம் என பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

WFH முறை:

உலகின் முன்னணி டெக் நிறுவனமான பேஸ்புக், அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தின் மென்லோ பார்க்கில் அமைந்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக கூகுள், ட்விட்டர் போன்ற முன்னணி சமூக வலைதள நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு வீடுகளில் இருந்தே பணியாற்றும் (WFH) முறையை அறிவித்துள்ளது. அந்த வகையில் பேஸ்புக் நிறுவனமும், தனது பணியாளர்களுக்கு WFH முறையை அளித்துள்ளது.

தமிழகத்தில் மதுபான கடைகள் நிரந்தரமாக மூடல் – அரசிடம் வலியுறுத்தல்!

இதில் சிறப்பு என்னவென்றால், கொரோனா பெருந்தொற்று ஓய்ந்த பிறகும் பேஸ்புக் பணியாளர்கள் வீடுகளில் இருந்தே பணிபுரியலாம். அதாவது ஜூன் 15 ஆம் தேதி துவங்கி, பேஸ்புக் ஊழியர்கள் WFH க்கு விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது. மேலும் WFH முறையில், ஊழியர்கள் செலவு குறைவான பகுதிகளுக்கு இருப்பிடங்களை மாற்றினால், அவர்களது ஊதியத்தில் இருந்து ஒரு தொகை பிடித்தம் செய்யப்படும் என அறிவித்தது.

மேலும் செப்டம்பரில் 50% ஊழியர்களுடனும், அக்டோபர் மாதத்தில் முழுவதுமாக பேஸ்புக் நிறுவனத்தை திறக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் 2021 ஆம் ஆண்டு இறுதி வரை விருப்பப்பட்டவர்கள் வீடுகளில் இருந்து பணிபுரியவும் அந்நிறுவனம் வாய்ப்பளித்துள்ளது. முன்னதாக பேஸ்புக் நிறுவனத்தில் உள்ள தொழில்நுட்பப் பிரிவு அல்லது பணியாளர் தேர்வு பிரிவில் உள்ளவர்களுக்கு, தாங்கள் விரும்பும் நாடுகளில் இருந்து பணி செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தது.

TN Job “FB  Group” Join Now

தற்போது இந்த சலுகை அனைத்து வகையான ஊழியர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதாவது ஜனவரி 2022 முதல் பேஸ்புக் ஊழியர்கள் கனடா, ஐரோப்பா, மத்திய கிழக்கு அல்லது ஆப்பிரிக்கா, பிரிட்டன் போன்ற இடங்களுக்கு செல்லலாம் என அறிவித்துள்ளது. முன்னதாக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுகர்பெர்க், அடுத்த ஐந்து முதல் பத்து ஆண்டுகளில், பேஸ்புக் நிறுவன பணியாளர்களில் 50 சதவீதம் பேர் அலுவலகம் வராத பணியாளர்களாகவே இருப்பார்கள் என குறிப்பிட்டிருந்தது கூடுதல் தகவல்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!