அம்ரிதாவை திருமணம் செய்யப்போகும் எழில், அதிர்ச்சியில் ரசிகர்கள் – அடுத்து வரும் திருப்பங்கள்!
விறுவிறுப்பாக நகரும் பாக்கியலட்சுமி தொடரில் கோபி, ராதிகா திருமணம் நடைபெறவுள்ள நிலையில் கோபியின் மகன் எழிலுக்கு அமிர்தாவை திருமணம் செய்து வைக்க பாக்கியா என்ன செய்ய போகிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சி ப்ரைம் டைம் தொடர் பாக்கியலட்சுமி புது கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி மக்களிடத்தில் அதிக வரவேற்பை பெற்றதால் இந்த ஆண்டு விஜய் டெலிவிசன் அவார்ட் நிகழ்ச்சியில் பல விருதுகளை தட்டி சென்றுள்ளது. ஆரம்பத்தில் இல்லத்தரசியை மையப்படுத்தியே பாக்கியலட்சுமி சீரியல் நகர்ந்து வந்த நிலையில் தற்போது காதலி ஒரு பக்கம், மனைவி மற்றொரு பக்கம் என ஜாலி பண்ணும் கில்லாடி கோபியை நோக்கியே கதைக்களம் மாற்றப்பட்டு ஹிட் கொடுத்து வருகிறது.
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜூலி – அதிர்ச்சியில் ரசிகர்கள்! அவரே வெளியிட்ட பதிவு!
எழில்,அமிர்தாவை காதலிக்கும் கதை அனைவருக்கும் தெரிந்த ஒன்று. தற்போது சீரியல் சத்திய மூர்த்தி தாத்தாவின் பிறந்தநாள் விழாவை கொண்டாடும் முன்னேற்பாடுகள் குறித்து எபிசோடுகள் நகர்ந்து வரும் நிலையில் பாக்கியா தாத்தாவுக்கு பிடித்த இனிப்பு செய்வதற்க்காக எழிலிடம் அமிர்தாவை அழைத்துவருமாறு சொல்கிறார். அப்போது எழில் தனது அம்மா அமிர்தா மீது நான் வைத்திருக்கும் காதலை புரிந்துகொண்டு தான் சொல்கிறார் என நினைத்து அமிர்தாவுக்கு போன் செய்து என்னோட அம்மா நம்ம காதலுக்கு ஓகே சொல்லிட்டாங்க என்று சொல்கிறார்.
அதற்க்கு அமிர்தா எப்படி? என்ன சொன்னாங்க என்று கேட்க, எழில் நடந்த அனைத்தையும் கூறுகிறான். மேலும், என்னோட அப்பா ஒதுக்கணும்னு அவசியம் இல்லை என்றும் சொல்லி சந்தோசத்தில் போனை வைக்கிறான். உடனே அமிர்தாவும் பாக்கியாவுக்கு அழைத்து பேசுகிறாள். அப்போது பாக்கியா உங்க கல்யாணம் குறித்து இப்போதைக்கு பேசவேண்டாம் என்றும் அதற்க்கு இன்னும் காலம் இருக்கு, நீங்க ரெண்டு பெரும் வாழ்க்கைல செட்டில் ஆகணும் என்று சொல்கிறார். அமிர்தாவும் மனதுக்குள் சந்தோஷித்தவளாக கண்டிப்பா எல்லாமே நல்லதா நடக்கும் அம்மா என்று சொல்லி வைக்கிறாள்.