அரங்கேறும் எழில் & அமிர்தாவின் திருமண வைபோகம் – பாக்கியலட்சுமி சீரியலில் புதிய திருப்பம்!
பாக்கியாவிடம் கோபி மாட்டிக்கொள்வாரா இல்லையா என எபிசோடுகள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில் இந்த வாரம் எழில் மற்றும் அமிர்தாவின் திருமண வைபோகம் நடைபெற இருக்கிறது.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. எப்போதுதான் கோபியை பற்றிய அனைத்து உண்மைகளும் பாக்கியாவிற்கு தெரிய வரப்போகிறதோ என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். தன்னை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்ளும் பாக்கியாவை விவகாரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்ய வேண்டுமென கோபி முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.
ExamsDaily Mobile App Download
ராதிகாவை திருமணம் செய்ய கோபி திட்டம் போட்டு கொண்டிருப்பது ஒருபுறம் இருக்க மறுபுறம் பாக்கியாவின் இரண்டாவது மகனான எழில் அமிர்தாவை திருமணம் செய்து கொள்ள திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார். அதாவது அமிர்தா விதவை என்பது தெரியாமல் அமிர்தாவின் மீது எழிலுக்கு காதல் வருகிறது. ஆனால், அமிர்தா விதவை என்பது தெரிந்த பின்பும் கூட காதலை மறக்க முடியாமல் அவளுடன் சேர்ந்து வாழவேண்டும் என நினைக்கிறார். இதுமட்டுமல்லாமல் அம்ரிதாவுக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது என்பதை தெரிந்து எழில் அதிர்ச்சி அடைகிறார்.
மத்திய அரசில் Clerk வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.20200/-
இருப்பினும் அமிர்தாவினை திருமணம் செய்ய வேண்டும் என எழில் நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் அமிர்தாவுக்கு எழில் மீது எந்த விருப்பமும் இல்லாமல் இருந்தது. இதன் பின்பு கல்லூரியில் அமிர்தாவிற்காக எழில் ரவுடிகளுடன் சண்டை போட்ட போது தான் எழில் மீது அமிர்தாவுக்கு காதல் வருகிறது. பாக்கியாவிற்கு கோபியை பற்றிய உண்மைகள் தெரியவருமா என சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில் இந்த வாரம் எழில் மற்றும் அமிர்தாவின் திருமண வைபோகம் நடைபெற இருக்கிறது. மணமேடையில் எழில் அமிர்தா கழுத்தில் தாலி கட்டுவது போன்ற ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.