எச்சரிக்கை.. மக்களை மோசமாக பாதிக்கும் கண் நோய்.. மாநகராட்சியின் முக்கிய அறிவிப்பு!

0
எச்சரிக்கை.. மக்களை மோசமாக பாதிக்கும் கண் நோய்.. மாநகராட்சியின் முக்கிய அறிவிப்பு!
எச்சரிக்கை.. மக்களை மோசமாக பாதிக்கும் கண் நோய்.. மாநகராட்சியின் முக்கிய அறிவிப்பு!
எச்சரிக்கை.. மக்களை மோசமாக பாதிக்கும் கண் நோய்.. மாநகராட்சியின் முக்கிய அறிவிப்பு!

மாறிவரும் பருவநிலை மாற்றம் காரணமாக மும்பை மாநகரில் கான்ஜுன்க்டிவிடிஸ் என்ற கண் நோய் தாக்கத்தால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மக்கள் கண்களில் பாதிப்பு ஏதேனும் இருந்தால் உடனே மருத்துவரை சந்திக்க வேண்டும் என BMC அறிவுறுத்தி இருக்கிறது.

கண் நோய்

நாடு முழுவதும் பல மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. பல மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ள பெருக்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மும்பையில் ‘கான்ஜுன்டிவிடிஸ்’ என அழைக்கப்படும் கண் அலர்ஜி நோய் பொதுமக்கள் இடையே வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக இந்த நோயால் அதிகம் சிறுவர்கள் பாதிக்கப்படுகின்றனர். மும்பை மருத்துவமனைகளில் பலர் சிவந்த கண்களுடன் வரிசையில் நிற்கின்றனர்.

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் – இன்று வெளியீடு!

Exams Daily Mobile App Download

மழைக்காலங்களில் காற்றின் வெப்பநிலை அதிகரிக்கும் போது அது நோய் பாதிப்பை ஏற்படுத்தும் வைரஸ்கள் பெருகுவதற்கு ஏற்ற சூழலை உருவாக்கும். அதனால் தான் தற்போது இந்த நோயின் தாக்கம் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நோய்க்கான அறிகுறிகளாக கண்களில் நீர் பெருகுதல், வீக்கம், கண் எரிச்சல் ஆகியவை இருக்கிறது. இந்நிலையில் நோயால் அதிகமான மக்கள் பாதிக்கப்படுவதால் இது குறித்து மும்பை மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

அதன் படி கண்களில் வலி அல்லது அசௌகரியம் ஏற்பட்டால், மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் மற்றும் சரியான நேரத்தில் மருத்துவர்களை சந்திக்க வேண்டும். கடந்த வாரம் 250 முதல் 300 மக்கள் இந்த நோய் அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்றுள்ளதாக மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நோய் வராமல் இருக்க அடிக்கடி கண்களை சுத்தமான தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும். மேலும் இந்த நோய் 5 அல்லது 6 நாட்களில் சரியாகிவிடும். ஆனாலும் மக்கள் கண் மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!