தமிழகத்தில் தீவிர முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? பலி எண்ணிக்கை உயர்வதால் எதிர்பார்ப்பு!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. ஆனால் நோய்த்தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தீவிர ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஊரடங்கு கட்டுப்பாடுகள்:
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து வருகிறது. அதன்படி தமிழகத்தில் நேற்று புதிதாக 16,813 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் நேற்று ஒரே நாளில் சிகிச்சை பலனின்றி கொரோனா தொற்றால் 358 பேர் பலியாகியுள்ளனர். இதனால் மக்கள் கடும் வேதனைக்கு உள்ளாகி வருகின்றனர். தற்போது சென்னை மாநகரத்தில் பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது.
தமிழகத்தில் ஜூன் 14 முதல் தேநீர், ஜவுளி கடைகள் திறப்பு? இன்று அறிவிப்பு வெளியீடு!
ஆனால் கோவை போன்ற பிற மாநகர பகுதிகளில் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் கோவையில் 2,236, ஈரோடு 1,390, மதுரை 279, திருச்சி 470 புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா பாதிப்பு விகிதம் 10 சதவிகிதத்திற்கு கீழ் குறைந்து வருகிறது. ஆனால் உயிரிழப்பு விகிதம் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது.
TN Job “FB Group” Join Now
அதன்படி தற்போது தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு விகிதம் 1.2 சதவிகிதமாக இருந்து வருகிறது. இதை கட்டுப்படுத்த வேண்டும் எனில் தமிழகத்தில் தீவிர ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது. எனவே வரும் நாட்களில் தளர்வுகள் அளிக்கப்படாமல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்னும் சில வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. தமிழகத்தில் வரும் 14ம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவுக்கு வரும் நிலையில், அதனை நீட்டிப்பது குறித்த முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது.