தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு கூடுதல் வட்டி – யுகோ வங்கி அறிவிப்பு!!

0
தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு கூடுதல் வட்டி - யுகோ வங்கி அறிவிப்பு!!
தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு கூடுதல் வட்டி - யுகோ வங்கி அறிவிப்பு!!
தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு கூடுதல் வட்டி – யுகோ வங்கி அறிவிப்பு!!

கொல்கத்தாவை மையமாக கொண்ட யுகோ வங்கி தங்களது வாடிக்கையாளர்களில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் 30 அடிப்படை புள்ளிகள் கூடுதல் வட்டி தருவதாக அறிவித்துள்ளது.

கூடுதல் வட்டி:

நாடு முழுவதும் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில், ஜூன் 21 முதல் அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்நிலையில் பொது மக்கள் தடுப்பூசி போட வேண்டும் என்ற நோக்கில் சில பொதுத்துறை வங்கிகள் சிறப்பு சலுகைகளை வழங்கியுள்ளன. அதாவது நீங்கள் தடுப்பூசி டோசை செலுத்திக்கொண்டால், உங்கள் நிலையான வைப்புத் தொகையில் (Fixed Deposit) அதிக வட்டி கிடைக்கக்கூடும. இந்த சலுகை குறிப்பிட்ட காலத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

தமிழக தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் – ஜிஜி உத்தரவு!

இந்நிலையில் கொல்கத்தாவை மையமாக கொண்ட யுகோ வங்கி தடுப்பூசி செலுத்தி கொண்ட வாடிக்கையாளர்களுக்கு அதிக வட்டி வழங்க முடிவு செய்துள்ளது. அதன்படி கோவிட் தடுப்பூசியின் ஒரு டோசையாவது செலுத்திக்கொண்ட விண்ணப்பதாரர்களுக்கு 999 நாட்களுக்கான FD-களில் 30 அடிப்படை புள்ளிகள் (30 Basis Points) அல்லது 0.30 சதவீதம் அதிக வட்டி விகிதத்தை வழங்குவதாக யுகோ வங்கி தெரிவித்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

கொரோனா பரவல் காரணமாக மக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள முன்வர வேண்டும் என்பதற்காக யுகோ வங்கி UCOVAXI-999 என்ற சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சலுகை செப்டம்பர் 30 வரை மட்டுமே கிடைக்கும் என வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!