தமிழகத்தில் 360 புதிய மருத்துவர்கள் நியமனம் – சுகாதாரத்துறை செயலர்!!
தமிழகத்தில் மிக அதிகமான அளவில் கொரோனா தொற்றின் பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மக்கள் அனைவரும் பதட்டமடைந்து மருத்துவமனைகளில் குவிய வேண்டாம் என்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
கொரோனா நோய்த்தொற்று:
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று ஒரு நாளில் மட்டும் 13,776 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் பல்வேறு கட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் மக்கள் அனைவரும் கொரோனா தொற்று அச்சம் காரணமாக மருத்துவமனைகளில் குவிந்து வருகின்றனர். தற்போது இது குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
அதன்படி அவர் கூறியதாவது, பொதுமக்கள் அனைவரும் தொற்றுக்கு அச்சமடைந்து மருத்துவமனைகளில் குவிய வேண்டாம். அதுமட்டுமல்லாமல் மக்கள் யாரும் தாங்களாகவே ரெம்டெசிவர் மருந்துகளை எடுத்துக்கொள்ள கூடாது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ரெம்டெசிவர் மருந்துகள் தேவைப்படாது என்று தெரிவித்தார். மேலும் சென்னையில் மொத்தம் 12 ஸ்க்ரீனிங் சென்டர் உள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் அங்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு பணி – பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை!!
மேலும் பொதுமக்கள் அனைவரும் காய்ச்சல் கண்காணிப்பு மையத்தையும் பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் கூடுதலாக 360 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் கூடுதலாக 2,400 ஆக்சிஜன் பொருந்திய படுக்கைகள் ஏற்படுத்தப்படும் என்றும், கவனிப்பு மையங்களில் 9,503 படுக்கைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.