தமிழகத்தில் கூடுதல் டெபாசிட் தொகை வசூலிப்பு – மின் நுகர்வோர் அதிர்ச்சி !!
தமிழகத்தில் கொரோனா பேரிடர் காலத்தில் கூடுதல் மின் கடடணத்தை மின் வாரியம் வசூலித்து வருகிறது என மின் நுகர்வோர்கள் புகார் அளித்து வருகின்றனர். மேலும் கூடுதல் டெபாசிட் தொகை செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கின்றனர்.
மின் வாரியம் :
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மற்றும் மே மாதங்களில் மின் கணக்கீடு செய்யப்படவில்லை. கடந்த வருடம் மே மாத தொகையை இம்மாதம் செலுத்தலாம் அல்லது இந்த வருடம் மார்ச் மாத தொகையை மே மாத கட்டணமாக செலுத்துவது அல்லது வீட்டின் மின் மீட்டரை புகைப்படம் எடுத்து வாட்ஸ்அப் மூலம் மின் வாரியத்திற்கு அனுப்பி அதற்கேற்ற கட்டணம் கணக்கிட்டு செலுத்தலாம் என்ற சலுகைகளை தமிழ்நாடு மின்வாரியம் அளித்தது. இதில் பல குழப்பங்கள் நிலவுவதாக புகார்கள் எழுந்தது. பின் அவை சரி செய்யப்பட்டு கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டு மின் கட்டணம் வசூலிக்கப்பட்டது.
பஞ்சாபில் ஜூலை 26 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு – கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு!
தற்போது கொரோனா பேரிடரால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து சிரமப்படும் நிலையில் கட்டணத்தை கால தாமதமாக செலுத்தினால் மின் வாரியம் அபராதத் தொகையை விதிக்கிறது. மேலும் கூடுதல் டெபாசிட் தொகை செலுத்த வேண்டும் எனவும் வற்புறுத்துவதாக புகார்கள் எழுந்து வருகிறது. மேலும் இந்த கட்டணத் தொகைகளை மின் கட்டணத்துடன் சேர்ந்தே செலுத்த இணையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மின் நுகர்வோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
TN Job “FB Group” Join Now
ஏற்கனவே உள்ள டெபாசிட் தொகை குறைவாக இருந்தால் செலுத்துவதற்கு 30 நாட்களுக்கு முன்பு நுகர்வோருக்கு தனித்தனியாக அறிவிக்க வேண்டும். என மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், கோவையில் மின்சார ஒழுங்குமுறை ஆணைய விதிகளை மீறி மின் பகிர்மான கழகம் தன்னிச்சையாக கூடுதல் டெபாசிட் தொகையை வசூலித்து வருவதாக கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் வாய்ஸ்’ அமைப்பின் செயலாளர் லோகு தெரிவித்துள்ளார். மேலும் கூடுதல் டெபாசிட் தொகை வசூலிக்கும் முறையை மின்சார வாரியம் நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.