தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு – திடீர் அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் இந்த ஆண்டின் பாதியில் கிட்டத்தட்ட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணி ஓய்வு பெற இருக்கின்றனர். ஆனால், தற்போது மாணவர்களின் நலன் கருதி இந்த கல்வியாண்டு முழுக்க பணியாற்றும்படி திடீர் அரசாணை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
பணி நீட்டிப்பு:
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் உள்ள இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்களுக்கான காலிப்பணியிடங்கள் அதிக அளவில் நிரப்பப்படாமலே உள்ளன. மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவலின் காரணமாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த முடியவில்லை. அதனுடன் ஏற்கனவே நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வின் மூலமாக தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களைக் கொண்டும் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
Exams Daily Mobile App Download
ஏற்கனவே, தமிழகத்தில் 8 ஆயிரத்து 462 ஆசிரியர் காலிப் பணியிடங்கள் உள்ளன. தற்போது அதைவிட அதிகமாக 13 ஆயிரத்து 331 ஆசிரியர் பணியிடங்கள் உள்ளன. உடனடியாக ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்வானவர்களை வைத்து காலிப்பணியிடங்கள் நிரப்ப முடியாத காரணத்தினால் தற்போதைக்கு தற்காலிக ஆசிரியர்களை கொண்டு இந்த காலிப் பணியிடங்களை நிரப்ப அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால், தற்காலிகமாக ஆசிரியர் பணியிடங்களை அரசு நிரப்ப முற்பட்டால் பலவிதமான முறைகேடுகள் நடைபெறலாம் என பலரும் இந்த திட்டத்திற்கு கண்டனம் தெரிவித்தனர்.
வங்கி தேர்வுகளுக்கு படித்துக் கொண்டிருப்போர் கவனத்திற்கு – உங்களுக்கான மாதிரி தேர்வு..!
இதனையடுத்து, மேலும் இந்த கல்வி ஆண்டின் பாதியில் இளங்கலை மற்றும் முதுகலை ஆசிரியர்கள் பலரும் பணி ஓய்வு பெற இருக்கின்றனர். அதாவது ஜூலை மாதத்திற்குள் கிட்டத்தட்ட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணி ஓய்வு பெற இருந்தனர். ஏற்கனவே, தமிழகத்தில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதால் மாணவர்களின் நலன் கருதி இந்த கல்வியாண்டு முழுக்க ஆசிரியர்கள் பணியாற்றும்படி பணி நீட்டிப்பு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.