NEET தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கவனத்திற்கு – கால அவகாசம் நீட்டிப்பு! மாணவர்கள் மகிழ்ச்சி!
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் வரும் 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து விண்ணப்பிப்பதற்கான நேரமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு:
இந்தியாவில் பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவ போன்ற மருத்துவ படிப்புகளில் சேர நீட் எனும் மத்திய அரசின் நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடந்த 2017 ம் ஆண்டு முதல் இந்த நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த வருடம் கொரோனா இரண்டாம் அலை தாக்கத்தால் விதிக்கப்பட்ட ஊரடங்கால் நீட் தேர்வு தாமதமாக நடத்தப்பட்டது. மேலும் கடந்த செப்டம்பர் மாதம் 12ம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை சுமார் 16 லட்சம் மாணவர்கள் எழுதினர். அதனை தொடர்ந்து தேர்வு முடிவுகளும் வெளியானது.
TN Job “FB Group” Join Now
மேலும் தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில் மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட்டது. கடந்த வருடத்தை தொடர்ந்து நடப்பாண்டிற்கான நீட் தேர்வு குறித்த அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியானது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை ஆகிய மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு விண்ணப்பபதிவுகள் ஏப்ரல் 2ம் தேதி நாடு முழுவதும் தொடங்கியது. மே 7ம் தேதி வரை மாணவர்கள் neet.nta.nic.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்தது
அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3% உயர்வு – அரசின் அதிரடி உத்தரவு!
விண்ணப்பபதிவுகள் நடைபெற்று வரும் இந்த நிலையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் வரும் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆயுதப்படை, நர்சிங் கல்லூரியில் B.Sc., நர்சிங் சேர நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் தற்போது கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. கூடுதல் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதால் அதிக எண்ணிக்கையானோர் விண்ணப்பிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விண்ணப்பதிவை தொடர்ந்து விண்ணப்பிப்பதற்கான நேரமும் அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.