கடைகளின் உரிமம் புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு – மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் உள்ள 7,000 கடைகளுக்கு உரிமம் புதுப்பிக்க 2 வாரங்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.
கால அவகாசம்:
தமிழகத்தில் கடைகள் அமைப்பதற்கு அரசிடம் உரிமம் பெறுவது அவசியம். இதன் மூலம் அரசு ஒவ்வொரு கடைகளுக்கும் கடை எண் வழங்குகிறது. மேலும் உரிமம் பெறுபவர்கள் அதை அவ்வப்போது புதுப்பிப்பு செய்வது கட்டாயம். இந்த வகையில் கடையின் உரிமம் உறுதி செய்யப்படுகிறது. புதுப்பிப்பு இல்லையெனில் கடை உரிமம் ரத்து செய்யப்படும். உரிமம் பெறப்படும் கடைகள் மாவட்ட நிர்வாகத்தால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனால் கடைகளில் நடைபெறும் சட்ட விரோதமான நிகழ்வுகள் தடுக்கப்படுகிறது.
இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் – மாநில அரசு அறிவிப்பு!
கடைகளை புதுப்பிப்பு செய்ய கூறி மாவட்ட நிர்வாகம் உரிய அறிவிப்புகளை அவ்வப்போது வெளியிடுகிறது. அந்த தேதிக்குள் கடை உரிமையாளர்கள் மாவட்ட நிர்வாகத்தில் தங்களின் கடை சம்பந்தப்பட்ட ஆவணங்களை சமர்ப்பித்து புதுப்பித்து கொள்ளலாம். தற்போது வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் கடைகளுக்கு உரிமம் புதுப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த 3 மாவட்டங்களில் சுமார் 24,000 கடைகள் இயங்கி வருகிறது.
மேலும் 15 நாட்களுக்கு இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!
இதில் 17 ஆயிரம் பேர் தங்கள் கடையின் உரிமத்தை புதுப்பித்து கொண்டுள்ளனர். மீதமுள்ள 7,000 பேர் உரிமத்தை புதுப்பிப்பு செய்யவில்லை. எனவே இவர்களின் நலன் கருதி கடையின் உரிமத்தை புதுப்பித்து கொள்ள இரண்டு வார கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் கடையின் உரிமத்தை புதுப்பிக்க தவறினால் நோட்டீஸ் வழங்கி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் எச்சரித்துள்ளார்.