தமிழகத்தில் கல்லூரிகளில் சேர கால அவகாசம் நீட்டிப்பு – உயர்கல்வித்துறை அறிவிப்பு!
தமிழகத்தில் 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகிய நிலையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்,பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க நேற்றுடன் அவகாசம் முடிவடைந்த நிலையில் உயர் கல்வித்துறை தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
மாணவர் சேர்க்கை:
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில் தற்போது கொரோனா பரவல் குறைய தொடங்கியதால் இந்த ஆண்டு பொது தேர்வு ன் நடத்த தமிழக அரசு முடிவு செய்தது. அதன் அடிப்படையில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மே மாதம் பொது தேர்வுகள் நடப்பட்டது. மேலும் பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது.
Exams Daily Mobile App Download
பிளஸ் 2 பொது தேர்வு எழுதிய மாணவர்கள் அரசு கலை கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க கடந்த மாதம் முதல் ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியது. அதன்படி இதுவரை பொறியியல் படிப்பில் சேர 1.91 லட்சம் பேரும், கலை அறிவியல் கல்லூரிகளில் சேர சுமார் 3.95 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். சி.பி.எஸ்.இ தேர்வு முடிவுகள் வெளியாக தாமதமான நிலையில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்க முடியாத நிலை இருந்து வந்தது.
பல மாவட்டங்களில் ஜூலை 26 வரை ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை – கனமழை வெளுத்து வாங்கும்!
இந்நிலையில் சி.பி.எஸ்.இ தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. சி.பி.எஸ்.இ தேர்வு முடிவுகள் வெளியாகும் நாளில் இருந்து அடுத்த 5 நாட்களுக்குள் வரை கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வி துறை அமைச்சர் கடந்த 8ம் தேதி அறிவித்திருந்தார். இந்த நிலையில் அரசு கலை அறிவியல் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேர வருகிற 27ம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டி உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. இது வரை 3 லட்சம் மாணவர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்துள்ளனர் என்று உயர்கல்வி துறை தெரிவித்திருந்தது.