வருமான வரி தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு? மத்திய அரசு அதிரடி உத்தரவு!
வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வாய்ப்பு இல்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து மத்திய வருவாய் செயலாளர் தருண் பஜாஜ் முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
வருமான வரி:
வருமான வரி என்பது ஒரு தனி நபரின் வருமானத்தின் மீது செலுத்தப்படும் வரியாகும். இது எந்த வகையான வருமானத்துடன் தொடர்புடையது என்பதை பொறுத்து வெவ்வேறு கட்டணங்களில் வசூலிக்கப்படுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு நிதியாண்டில் முடிவிலும் ஆண்டுதோறும் வருமான வரி வசூலிக்கப்படுகிறது.
இந்த வருமான வரி அரசாங்க கடமைகளை செலுத்தவும், பொது சேவைகளுக்கு நிதியளிக்கவும், குடிமக்களுக்கு பொருட்களை வழங்கவும் பயன்படுத்தப்படுகிறது.
Exams Daily Mobile App Download
இந்திய அரசாங்கம் விதிக்கும் வரிகளில் இரண்டு வரிகள் மிகவும் முக்கியமானது. அவை நேரடி வரி மற்றும் மறைமுக வரி ஆகும். வருமான வரியானது நேரடி வரியின் கீழ் வருகிறது. இதை மத்திய நேரடி வரிகள் வாரியம் கவனிக்கிறது.2021- 2022 நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்ய ஜூலை 31 கடைசி நாளாகும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு டிசம்பர் 31ம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்பட்டது.
TNPSC குரூப் 4 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு – தேர்வுக்கு எடுத்து செல்ல வேண்டிய பொருட்களின் விவரம்!
ஒவ்வொரு வருடமும் ஐ.டி.ஆர் ஐடிஆர் தாக்கல் செய்ய ஜூலை 31 கடைசி நாளாக நிர்ணயிக்கப்படும். இந்த ஆண்டும் ஜூலை 31 தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. இது குறித்து மத்திய வருவாய் செயலாளர் தருண் பஜாஜ் சில தகவல்கள் கூறியுள்ளார். 2021- 2022 நிதியாண்டில் ஜூலை 20 தேதிக்குள் 2.3 கோடி வருமான கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையானது மேலும் அதிகரித்து வருகிறது. தேதி நீட்டிக்கப்படும் என்பது வாடிக்கையான ஒன்றுதான் என்று மக்கள் நினைத்திருந்த நிலையில் ரிட்டர்ன்களை நிரப்புவதில் மக்கள் தாமதம் செய்து வந்தனர். மேலும் தற்போது 15 லட்சம் முதல் 18 லட்சம் வரை வருமான வரி தாக்கல் நடக்கிறது. இனி வரும் காலங்களில் 25 லட்சம் வரை உயரும் என்றும் 30 லட்சம் ரிட்டர்ன்கள் வரை தாக்கலாகும் என மத்திய வருவாய் செயலாளர் தெரிவித்துள்ளார். கடந்த முறை 50 லட்சத்துக்கும் மேல் கடைசி தேதியில் ரிட்டன் தாக்கல் இருந்தது. இந்த முறை 1 கோடிக்கும் மேலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறியுள்ளார்.