TN TET தேர்வுக்கு ஏப்.26ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு – ஆசிரியர் தேர்வு வாரியம்!
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க கடந்த ஏப்ரல் 13ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் சர்வர் பிரச்சனை காரணமாக ஏராளமானோர் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை இருந்தது. அதனால் விண்ணப்பிக்க கால அவகாசத்தை தற்போது நீட்டித்துள்ளது.
கால அவகாசம் நீட்டிப்பு
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி புரியும் பள்ளிகளில் தகுதி மற்றும் திறமை வாய்ந்த ஆசிரியர்களை நிரப்ப தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த அறிவிப்பு அண்மையில் வெளியானது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடந்த மார்ச் 13ம் தேதி முதல் ஏப்ரல் 13ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டது. மேலும் தற்போது ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் கிடைக்கும் சான்றிதழ் வாழ் முழுவதும் செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அரசு பரிசீலனை!
அத்துடன் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு இத்தேர்வு நடைபெற உள்ளதால் இத்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் விண்ணப்பித்தனர். இதனை தொடர்ந்து இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி சில நாட்களில் சர்வர் பிரச்சனை ஏற்பட்டது. அத்துடன் விண்ணப்பத்தார்களுக்கான OTP எண் சென்றடையவில்லை. அத்துடன் முதலாம் ஆண்டு பி.எட் படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் இவர்களின் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகத்தால் இவர்களால் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை உள்ளது.
ESIC நிறுவனத்தில் ரூ.78,800/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு – 55 காலிப்பணியிடங்கள்..!
அதனால் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க மேலும் சில நாட்கள் நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்று கொண்ட ஆசிரியர் தேர்வு வாரியம் இது குறித்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில், ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளது. அதனால் ஏப்ரல் 18ம் தேதி முதல் ஏப்ரல் 26ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது என்று இதில் கூறப்பட்டுள்ளது.