TNPSC தேர்வர்களுக்கு ஹாப்பி நியூஸ் – OTR பதிவுடன் ஆதாரை இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு!

0
TNPSC தேர்வர்களுக்கு ஹாப்பி நியூஸ் - OTR பதிவுடன் ஆதாரை இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு!
TNPSC தேர்வர்களுக்கு ஹாப்பி நியூஸ் - OTR பதிவுடன் ஆதாரை இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு!
TNPSC தேர்வர்களுக்கு ஹாப்பி நியூஸ் – OTR பதிவுடன் ஆதாரை இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு!

TNPSC தேர்வு எழுதும் அனைத்து தேர்வுகளும் தங்களுடைய ஒரு முறை நிரந்தரப் பதிவு கணக்குடன், ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் ஆகும். எனவே ஒரு முறை நிரந்தரப் பதிவு கணக்குடன் ( OTR ) ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசம் ஏப்ரல் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

TNPSC அறிவிப்பு:

TNPSC அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பி வருகிறது. மேலும் கொரோனா எதிரொலியாக கடந்த 2 வருடங்களில் எந்த ஒரு போட்டித் தேர்வும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நோய் தாக்கம் குறைந்து வருவதால் குரூப் 2, குரூப் 2A தேர்வுக்கான அறிவிப்பை TNPSC கடந்த 18ம் தேதி வெளியிட்டது. இந்த அறிவிப்பில் குரூப் 2, குரூப் 2A தேர்வு மே 21ம் தேதி நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியிடப்படும் மற்றும் குரூப்-2 தேர்வு 3 கட்டமாக நடைபெற உள்ளது.

மத்திய அரசு ஊழியர்கள் வங்கிக்கணக்கில் ரூ.10000 – பண்டிகை கால சிறப்பு முன்பணம்! அரசு திட்டம்?

மேலும் TNPSC தற்போது தேர்வர்கள் பயன்பெறும் விதமாக காலத்திற்கேற்ப தேவையான மாற்றங்களை அறிமுகம் செய்து அவற்றை நடைமுறைப்படுத்தி வருகிறது. அந்த வகையில் TNPSC தேர்வு எழுதுபவர்களில், ஒரு முறை நிரந்தரப் பதிவு (One Time Registration – OTR) கணக்கு வைத்திருக்கும் அனைத்து தேர்வர்களும் தங்களது ஆதார் குறித்த விவரங்களை இணையதளத்தில் பிப்ரவரி 28ம் தேதி இணைக்க வேண்டும் என்று முன்னதாக அறிவித்து இருந்தது. இந்த அறிவிப்பு அடிப்படையில் OTR கணக்கு வைத்திருக்கும் தேர்வர்கள் ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர்.

பாக்கியாவிடம் வீட்டு செலவு பற்றி சண்டை போட்ட கோபி, நகைகளை கொடுத்த ஈஸ்வரி – இன்றைய எபிசோட்!

ஆனால் தற்போது இந்த OTR பதிவுடன் ஆதாரை இணைப்பதற்கு ஏப்ரல் 30ம் தேதி வரை கால அவகாசம் நீட்டித்து TNPSC அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இந்நிலையில் குரூப் 2, குரூப் 2A தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 23-ம் தேதி ஆகும். எனவே குரூப் 2, குரூப் 2A தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள் வரும் 23ம் தேதிக்குள் ஆதாரை ஒரு முறை நிரந்தரப் பதிவு உடன் இணைக்க வேண்டும். மேலும் முன்னதாக OTR கணக்குடன் ஆதாரை இணைத்த தேர்வர்கள் மீண்டும் இணைக்க தேவையில்லை என்று TNPSC அறிவித்துள்ளது. இந்த குறித்து கூடுதல் விபரங்கள் அறிய அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!