அரசு ஊழியர்களின் பயணப்படி (TA) உரிமைகோரல் – காலஅவகாசம் நீட்டிப்பு!
மத்திய அரசு துறைகளில் வேலை பார்க்கும் ஊழியர்கள் தங்களுக்கான பயணப்படி உரிமைகோரல்களை சமர்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணப்படி உரிமைகோரல்:
மத்திய அரசு துறையில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு அரசின் சார்பாக ஓய்வு பெற்றதும் பயணப்படி வழங்கப்படும். பயணப்படி என்பது அரசு துறை ஊழியர்கள் பணி முடிந்ததும், அதாவது ஓய்வு பெற்றதும் தங்களது சொந்த ஊர்களில் குடியேறுவதற்காக வழங்கப்படும் பணம் ஆகும். இதற்காக ஊழியர்கள் தங்களுக்கு பயணப்படி தேவை என்பதற்கு உரிமைகோரல் செய்ய வேண்டும்.
பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் – பெற்றோர்களுக்கான வழிகாட்டு நெறிமுறை வெளியீடு!
கடந்த சில ஆண்டுகளாக ஒருவர் ஓய்வு பெற்று 60 நாட்களில் பயணப்படி உரிமைகோரலை செய்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டு வந்தது. இந்த கால அவகாசத்தினை நீட்டிக்க வேண்டும் என்று தொடர்ந்து அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இதனை மத்திய அரசு பரிசலித்து அதற்கான அறிவிப்பினை வெளியிடும் என்று எதிர்பார்த்து வந்த நிலையில் தற்போது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான குழு பயணப்படி உரிமைகோரக்களுக்கான கால அவகாசத்தினை 60 நாட்களில் இருந்து 150 நாட்களாக நீடித்து உள்ளது.
TN Job “FB Group” Join Now
ஓய்வு பெற்ற 150 நாட்கள் வரை ஊழியர்கள் தங்களுக்கான பயணப்படி உரிமைகோரலை சமர்ப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. வெறும் 60 நாட்களுக்குள் பயணப்படி உரிமைகோரலை சமர்ப்பிப்பது அனைத்து ஊழியர்களுக்கும் சிரமமாக இருந்த காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கை மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.