TN TET தேர்வுக்கு விண்ணப்பிக்க மீண்டும் கால அவகாசம் நீட்டிப்பு – TRB முக்கிய அறிவிப்பு!

0
TN TET தேர்வுக்கு விண்ணப்பிக்க மீண்டும் கால அவகாசம் நீட்டிப்பு - TRB முக்கிய அறிவிப்பு!
TN TET தேர்வுக்கு விண்ணப்பிக்க மீண்டும் கால அவகாசம் நீட்டிப்பு - TRB முக்கிய அறிவிப்பு!
TN TET தேர்வுக்கு விண்ணப்பிக்க மீண்டும் கால அவகாசம் நீட்டிப்பு – TRB முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு கடந்த 13-ஆம் தேதியுடன் நிறைவடைந்து விட்டது. ஆனால், கடைசி ஒரு வாரத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சர்வர் முடங்கியதால் பலரால் விண்ணப்பம் செய்ய முடியவில்லை. இதனால் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் கால அவகாசம் தர வேண்டும் என பலர் கோரிக்கை வைத்தனர். இது குறித்து முக்கிய அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டு உள்ளது.

முக்கிய அறிவிப்பு:

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கான ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. இதற்கு பல்வேறு தேர்வுகள் நடத்தப் படுகின்றன. இந்த தேர்வுகளில் மிக முக்கியமானது TET தேர்வு. இந்த தேர்வு இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வாகும். கடந்த மார்ச் 7ம் தேதி TET தேர்வு அறிவிப்பு வெளியானது. இதன் அடிப்படையில் TET தேர்வுக்கான விண்ணப்ப பதிவு மார்ச் 14ம் தேதி முதல் தொடங்கியது. இந்த தேர்வு முதல் , இரண்டாம் தாள் எனும் வகையில் நடைபெறும். டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி படித்தவர்கள் முதல் தாள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் இரண்டாம் தாள் தேர்வினை எழுதலாம்.

மே 25 முதல் கல்லூரி மாணவர்களுக்கு கோடை விடுமுறை துவக்கம் – மாநில அரசு அறிவிப்பு!

முதல் மற்றும் இரண்டாம் தாளில் 150 வினாக்கள் இடம்பெறும். இதில் பெரும்பாலும் குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல், மொழிப்பாடம் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் இருந்து வினாக்கள் இடம்பெறும். இத்தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவுகள் கடந்த ஏப்ரல் 13ம் தேதியுடன் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், கடைசி ஒரு வாரத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சர்வர் முடங்கியதால் பல்லாயிரக்கணக்கானவர்களால் விண்ணப்பம் செய்ய முடியவில்லை. இதையடுத்து பி.எட். பட்டப் படிப்புக்கான முதலாம் ஆண்டு தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படாததால் அவர்களாலும் விண்ணப்பிக்க முடியவில்லை. மேலும் சர்வர் பிரச்சினை, கால அவகாசம் போதாமையால் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு எதிர்பார்த்த அளவுக்கு விண்ணப்பங்கள் பெறப்படவில்லை.

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத்தொகை உயர்வு? அரசு தரப்பு விளக்கம்!

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு ஒரே நேரத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்க முயற்சித்ததால், சர்வர் கோளாறு ஏற்பட்டதாகவும், எனவே அந்த பேண்ட்வித் உயர்த்தப்பட்டு இருப்பதாகவும் ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம் அளித்தது. மேலும் கடந்த 13 ஆம் தேதி தான் பி.எட் இறுதியாண்டு மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டதால், விண்ணபிக்கக் கூடுதல் அவகாசம் வேண்டும் என்று சில தேர்வர்கள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவினை நீட்டிக்குமாறு கோரிக்கைகள் தொடர்ந்து பெறப்பட்டதை அடுத்து 18.04.2022 முதல் 26.04.2022 வரை விண்ணப்பங்கள் பெறுவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!