தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு – பணி காலம் நீட்டிப்பு!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும் தற்காலிக ஆசிரியர்களின் பணி தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பணி நீட்டிப்பு:
தமிழக அரசு பள்ளிகளில் அவ்வப்போது ஏற்படும் காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்யும் பொருட்டு அரசு தற்காலிக ஆசிரியர்களை நியமித்து வருகிறது. பள்ளிகளில் ஏற்படும் ஆசிரியர்களின் பற்றாக்குறையால் கற்றல் – கற்பித்தலில் மாணவர்களுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்பட கூடாது என்பதை கருத்தில் கொண்டு தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியர் கல்வி முடித்தவர்கள் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்படுகின்றனர்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தகுதித்தேர்வின் படி நிரந்தர ஆசிரியர்களை அரசு நியமனம் செய்யும் வரை இந்த தற்காலிக ஆசிரியர்கள் தொடர்ந்து பணியில் இருப்பார்கள். அண்மையில் தமிழக அரசு பள்ளிகளில் பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்களுக்கான சம்பளத்தை வழங்க முடிவு செய்தது.
அட..ஒரே நாளில் ரூ.80 குறைந்து மாஸ் காட்டிய தங்கத்தின் விலை – உடனே வாங்குங்க..நல்ல சான்ஸ்!
அதற்கான நிதி ரூ.109 கோடியை விடுவித்தது. அதனை தொடர்ந்து தற்போது பள்ளிக்கல்வித்துறை அரசு பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் உட்பட சுமார் 912 தற்காலிக ஆசிரியர்களின் பணியை மேலும் 3 மாத காலத்திற்கு நீட்டிப்பு செய்துள்ளது.