டிச.31ம் தேதி வரை வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு – தொழில்நுட்ப சிக்கல் எதிரொலி!
வருமான வரி தாக்கல் செய்வதற்காக மத்திய அமைச்சகம் புதிதாக அறிமுகம் செய்த இணையதளம் தொடர்ந்து தொழில்நுட்ப சிக்கல் காரணமாக முடங்கியுள்ளது. இதனால் வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 31ம் தேதி வரை நீடித்துள்ளது.
கால அவகாசம் நீட்டிப்பு:
இந்திய அரசின் வருமானவரி சட்டம் 1961-ன் படி, 15 CA,15 CB படிவங்களை மின்னணு முறையில் தாக்கல் செய்ய வேண்டும். தற்போது நாடு முழுவதும் உள்ள வரி செலுத்துவோர், வெளிநாட்டு பணம் பெற்றிருந்தால், 15 CA படிவத்தை, பட்டய கணக்காளர் சான்றிதழுடன் அங்கீகரிக்கப்பட்ட டீலரிடம் நகலை தாக்கல் செய்வதற்கு முன்பாக, மின்னணு தாக்கல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதற்காக வருமான வரித்துறை புதிய இணையதளம் ஒன்றை அறிமுகப்படுத்தியது.
தமிழகத்தில் அக்டோபர் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் உத்தரவு!
ஆனால் இந்த இணையதளத்தில் படிவங்களை தாக்கல் செய்ய சில சிக்கல்கள் ஏற்பட்டது. இது குறித்து வருமான வரித்துறையிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே 15 CA, 15 CB படிவங்களை தாக்கல் செய்ய செப்டம்பர் 30 கடைசி தேதி அறிவிக்கப்பட்டது. தற்போதும் இதற்கான இணையதளம் சீரமைக்க முடியவில்லை. இதனால் வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலஅவகாசத்தை மேலும் நீடிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தது. இந்நிலையில் இன்று (செப்டம்பர் 9) வருமான வரி அமைச்சகம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அதன்படி, 2021 – 22 ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய அவகாசம் டிசம்பர் 31, 2021 வரை நீட்டிக்கப்படுகிறது. 2020 – 21 ஆண்டுக்கான தணிக்கை அறிக்கையை சமர்பிக்கும் தேதி ஜனவரி 15 வரை நீட்டிக்கப்படுகிறது. சர்வதேச பரிவர்த்தனை அல்லது குறிப்பிட்ட உள்நாட்டு பரிவர்த்தனைக்கு கணக்காளரிடமிருந்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டிய தேதி 2022, ஜனவரி 31 வரை நீட்டிக்கப்படுகிறது. தணிக்கை தேவைப்படும் வருமான கணக்கு தாக்கலுக்கான கடைசி தேதி 2022, பிப்ரவரி 15 ஆக நீட்டிக்கப்படுகிறது என்று அறிவித்துள்ளது.