நாளை (மே 8) இரவு வரை முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு – மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை!
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடைபெற்ற வன்முறையை முன்னிட்டு அப்பகுதியில் விதிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் மே 8 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை சுமார் 10 பகுதிகளில் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு
கடந்த மே 3ம் தேதி அன்று ஈத் பண்டிகையை முன்னிட்டு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் பெரும் வன்முறை வெடித்தது. இதனால் வன்முறையால் பாதிக்கப்பட்ட நகரத்தின் 10 பகுதிகளில் மே 3 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இப்போது ஜோத்பூரில் விதிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நாளை அதாவது மே 8 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஜோத்பூர் நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கான உத்தரவை பிறப்பித்த மாவட்ட போலீஸ் கமிஷனர், ‘தற்போதைய சூழ்நிலையில், நகரின் 10 காவல் நிலையப் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
ஜோத்பூர் கமிஷனரேட் பகுதியில் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973 பிரிவு 144ன் கீழ் அமலில் இருக்கும் தடை உத்தரவு மே 8 நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்படும். மேலும் செய்தித்தாள் வியாபாரிகள் செய்தித்தாள்களை விநியோகிக்க அனுமதிக்கப்படுவார்கள்’ என்று தெரிவித்துள்ளார். இது தவிர, பரீட்சைக்கு தயாராகும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஊரடங்குச் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மருத்துவ சேவையில் ஈடுபடும் பணியாளர்கள், வங்கி அதிகாரிகள், நீதித்துறை அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோருக்கும் ஊரடங்குச் சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – நேர மாற்றம் செய்ய முடிவு!
இப்போது, ஈத் பண்டிகைக்கு முன்பு ஜோத்பூரில் நடந்த வகுப்புவாத மோதல்கள் தொடர்பாக இதுவரை 211 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் நகரின் நிலைமை கட்டுக்குள் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நகரின் 10 காவல் நிலையப் பகுதிகளில் மொபைல் இணைய சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமையை மதிப்பிட்டு இந்த சேவைகளை மீண்டும் தொடங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று மாவட்ட மாஜிஸ்திரேட் ஹிமான்ஷு குப்தா கூறியுள்ளார்.