தமிழகத்தில் முழு ஊரடங்கு தளர்வுகளுடன் நீட்டிப்பு – ஜவுளி ஏற்றுமதி பணிகள் துவக்கம்!

0
தமிழகத்தில் முழு ஊரடங்கு தளர்வுகளுடன் நீட்டிப்பு - ஜவுளி ஏற்றுமதி பணிகள் துவக்கம்!
தமிழகத்தில் முழு ஊரடங்கு தளர்வுகளுடன் நீட்டிப்பு - ஜவுளி ஏற்றுமதி பணிகள் துவக்கம்!
தமிழகத்தில் முழு ஊரடங்கு தளர்வுகளுடன் நீட்டிப்பு – ஜவுளி ஏற்றுமதி பணிகள் துவக்கம்!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டு உள்ள நிலையில், ஈரோடு மாவட்டத்தில் இயங்கி வரும் ஜவுளி துணிகளை உற்பத்தி செய்யும் பணிகள் 50% பணியாளர்களுடன் மீண்டும் துவங்கியது.

ஜவுளி ஏற்றுமதி

கொரோனா 2 ஆம் அலை காரணமாக தமிழகத்தில் மே 10 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கொரோனா பரவல் வேகம் குறைந்து வந்ததை அடுத்து கடந்த சில வாரங்களாக பல்வேறு சேவைகளுக்கு அனுமதிகள் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட வேண்டிய ஆயத்த ஆடைகளை உற்பத்தி செய்யும் பணிகள் மீண்டுமாக துவங்கியுள்ளது. அதாவது தமிழகத்தில் அளிக்கப்பட்டு வரும் முழு ஊரடங்கு தளர்வில் ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் மீண்டுமாக செயல்பட அனுமதி கொடுக்க வேண்டும் என நிர்வாகிகள், அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

தமிழ்நாடு மின் வாரியத்தின் முக்கிய அறிவிப்பு வெளியீடு – ஜூன் 24 மின்தடை!

அந்த வகையில் ஜவுளி தயாரிப்பு நிறுவனங்கள் 50% பணியாளர்களுடன் மீண்டும் துவங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஈரோடு மாவட்ட ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்க செயலர் சிவானந்தன் கூறுகையில், ‘ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஜவுளி தயாரிப்பு நிறுவனங்களில் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக1000 கோடிக்கு ஜவுளி டெண்டர்கள் எடுக்கப்பட்டது. இப்பணிகள் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் தான் மாநிலம் முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதனால் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு 500 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்படும் சூழல் உருவாகியது.

TN Job “FB  Group” Join Now

தற்போது ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் செயல்படுவதற்கு அரசு அளித்துள்ள அனுமதியால், இழப்பு ஏற்படுவது பெருமளவு தடுக்கப்படும். அதாவது ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்களில் 50% ஊழியர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளதால், 10,000 க்கும் மேற்பட்டவர்கள் பணி செய்து வருகின்றனர். ஊரடங்கு காலத்தில் அவர்களுக்கு முழு ஊதியம் கொடுக்கமுடியாவிட்டாலும், பாதி சம்பளம் வழங்கி வருகிறோம். இன்னும் ஓரிரு வாரத்தில் 100% பணியாளர்கள் வேலைக்கு திரும்புவார்கள் என எதிர்பார்த்துள்ளோம். கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி பணியாளர்களை வேலை செய்ய ஊக்குவித்துள்ளோம்’ என தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!