முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் மீண்டும் நீட்டிப்பு – அரசின் திடீர் முடிவு
ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் சீனாவின் மேற்கு மாகாணங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. ஒமைக்ரான் தொற்று பாதிப்பு அதிகரிப்பு காரணமாக சீனாவின் முக்கிய வணிக நகரமான ஷாங்காயில் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் கொரோனா புதிய அலை தாக்குமோ என்கிற அச்சம் நிலவுகிறது.
முழு ஊரடங்கு:
கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் முறையாக சீனாவின் வுகான் நகரில் கொரோனா பாதிப்பு மனிதர்களிடையே கண்டறியப்பட்டது. அதன் பிறகு, இந்த தொற்று பாதிப்பு அசூர வேகத்தில் உலக நாடுகளில் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இன்றளவும் கூட கொரோனா பாதிப்பிலிருந்து முழுமையாக மீள முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. இந்நிலையில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா பாதிப்பின் தீவிரம் குறைந்துள்ளது. ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சீனாவின் ஒமைக்ரான் தொற்று பரவல் வேகமெடுக்க ஆரம்பித்துள்ள நிலையில், ஒமைக்ரான் தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் அதிகரிக்க தொடங்கிய கொரோனா பாதிப்பினால், தற்போது பெருநகரங்கள் கொரோனா ஹாட்ஸ்பாட் ஆக மாறியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வது எப்படி?
சீனாவில் தற்போது பதிவாகி வரும் பாதிப்பு எண்ணிக்கை உலக அளவில் குறைவானதாக இருந்தாலும், 2019 ல் ஏற்பட்ட முதல் வார பாதிப்பை விட அதிகம் என்று கூறப்படுகிறது. சீனா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாக பதிவாகும் இடங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரம் ஆக்கப்பட்டுள்ளன. அதன்படி, வணிக நகரமான ஷாங்காயில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சீனாவின் உள்நாட்டு பொருளாதாரத்தில் அடி விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இம்மாதம் தொடக்கம் முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மேலும் வருமான இழப்பு மற்றும் உணவு தட்டுப்பாட்டால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
ExamsDaily Mobile App Download
இருப்பினும் நகரின் பல்வேறு பகுதிகளில் எவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லாத நிலை ஏற்பட்டது. இதனால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், டெஸ்லா உட்பட ஏராளமான தொழிற்சாலைகள் மீண்டும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், ஒரு சில பகுதிகளில் கொரோனா பாதிப்புகள் சற்று அதிகரித்ததால் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக ஷாங்காய் மாநகரில், கடந்த 3 வாரங்களாக பொதுமுடக்கம் அமலில் இருந்தது. இதனால் வாகனத் தொழில் கடும் இழப்பை சந்தித்துள்ளது. இது சர்வதேச நிறுவனங்களுக்கு பெரும் அடியை ஏற்படுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. உலகின் பிற பகுதிகளுக்கும் சீனாவின் புதிய கொரோனா வைரஸ் பரவுமோ என்கிற அச்சம் உருவாகி உள்ளது.