வருமான வரி தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு – ஆகஸ்ட் 31 கடைசி நாள்!
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக மாநில வாரியாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் வருமான வரி செலுத்துபவர்கள் குறிப்பிட்ட படிவங்களை தாக்கல் செய்ய ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருமான வரி:
இந்திய அரசின் வருமான வரி சட்டம் 1961-ன் படி, படிவங்களை மின்னணு முறையில் தாக்கல் செய்ய வேண்டும். தற்போது நாடு முழுவதும் கொரோனா நிதி நெருக்கடி காரணமாக வரி செலுத்துவோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் சில படிவங்களை தாக்கல் செய்வதில் சிரமம் உள்ளதாக புகார் வந்துள்ளது. இதனால் வருமான வரித்துறை சார்பில் வருமான வரி தாக்கல் செய்ய ஆகஸ்ட் 31 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் 2021-22 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் – ஆகஸ்ட் 13 ஆம் தேதி தாக்கல்!
இது குறித்து வருமான வரித்துறை ட்விட்டரில், வரி செலுத்துவோர் மற்றும் இதர பங்குதாரர்கள் அளித்த புகார்களை பரிசீலித்த பின், வருமான வரித் தாக்கல் படிவங்களை மின்னணு வடிவில் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 5CC படிவத்தை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இதேபோல, 2020-21 ஆம் நிதியாண்டுக்கான படிவ எண் 1-இல் உள்ள Equalization Levy அறிக்கை தாக்கல் செய்ய கடைசி தேதி ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 64D படிவத்தை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி செப்டம்பர் 15 ஆம் தேதி வரையிலும், 64C படிவத்தை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என வருமான வரித்துறை அறிவித்துள்ளது.