தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு, தடுப்பு பணிகள் – ஆளுநரை சந்திக்கும் முதல்வர்!
தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து விளக்கம் அளிக்க முதல்வர் இன்று மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்திக்க உள்ளார்.
கொரோனா தடுப்பு பணிகள்:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக தற்போது தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலங்கள் 30 சதவீத ஊழியர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கோவின் இணையதளத்தில் தமிழ் மொழி சேர்ப்பு – மத்திய அரசு நடவடிக்கை!!
ஆனால் தனியார் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் செயல்பட தொடர்ந்து தடை நீடிக்கின்றனர். மேலும் தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் கொரோனா பரவல் சற்று கட்டுக்குள் வந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 18 ஆயிரத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து விளக்கம் அளிக்க உள்ளார். மேலும், சட்டப்பேரவை கூட்டத்தில் உரையாற்ற ஆளுநருக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.