புதுச்சேரியில் ஜூன் 21 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு – அறிவிப்பு வெளியீடு!!
புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 21 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு :
புதுச்சேரியில் கொரோனா இரண்டாம் அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதனால் அரசு நோய் தடுப்பு பணிகளை விரைவாக செயல்படுத்தியது. சுகாதாரத்துறை , மருத்துவத்துறை , தன்னார்வலர்கள் மூலமாக தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. கொரோனா பாதிப்பு முதல் அலையை விட இரண்டாம் அலையில் அதிகமாக உள்ளது. மக்களின் நடமாட்டத்தை குறைக்க அரசு ஊரடங்கை அமல்படுத்தியது. அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் முதல் புதுச்சேரியில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. மேலும் தொற்று பரவல் அதிகரித்ததால் ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது.
தமிழகத்தில் 18 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – தலைமை செயலர் உத்தரவு!
தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் புதுச்சேரி அரசு ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மட்டும் மதியம் 12 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூன் 14 முதல் கடைகள் திறக்கும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனால் மீண்டும் புதுச்சேரி முதல்வர் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து ஊரடங்கை ஜூன் 21 வரை நீடித்துள்ளார்.அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வங்கிகளில் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு FD திட்டம் – ஜூன் 30 இறுதி நாள்!
அனைத்து தனியார் நிறுவனங்களும் 100 சதவீத ஊழியர்களுடன் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை வழக்கம் போல் இயங்கலாம் எனவும், மதுபான கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மது விற்பனை செய்யவும், அரசு , மற்றும் தனியார் போக்குவரத்து இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், கட்டுமான பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் செயல்பட புதுச்சேரி அரசு அனுமதி வழங்கியுள்ளது.மேலும் ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசிகளை செலுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.