தமிழகத்தில் குட்கா, பான் மசாலா போதை பொருட்களுக்கு தடை நீட்டிப்பு – அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் தற்போது மது விற்பனை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறது. இதனால் பொதுமக்கள் மதுவிலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் குட்கா, பான் மசாலா போன்ற போதை பொருட்களுக்கு கடந்த 2011ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது இதற்கு மேலும் 1 ஆண்டு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
போதை பொருள்
தமிழகத்தில் மது பிரியர்கள் ஏற்கனவே மதுவை அதிகமாக அளவு குடித்து தங்களின் உடலுக்கு அவர்களே தீங்கு விளைவிக்கின்றனர். அத்துடன் குட்கா, பான் மசாலா முதலிய போதைப் பொருட்களையும் இவர்கள் உபயோகப்படுத்துவதால் கேன்சர் உள்ளிட்ட உயிர்க்கொல்லி நோய் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகிறது. அதனால் தமிழக அரசு இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து போதை பொருட்களின் புழக்கத்தை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை அரசு கையாண்டு வருகிறது.
Exams Daily Mobile App Download
அந்த வகையில் தற்போது பிற மாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தி கொண்டு வரப்படுவதை போலீசார்கள் கண்காணித்து பறிமுதல் செய்து போதை பொருட்கள் விற்பனை செய்வதைத் தடுத்து வருகின்றனர். அதன்படி இதன் மூலமாக பல கோடிக்கணக்கான மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வகை போதை பொருட்களை விற்பனை செய்வதை முற்றிலுமாக நிறுத்த கடந்த 2011ம் ஆண்டு முதல் குட்கா, பான் மசாலா போன்ற போதைப் பொருட்கள் தமிழகத்தில் தடை செய்யப்பட்டது. அத்துடன் இத்தகைய போதைப்பொருட்களை, உற்பத்தி செய்வதோ, சேமித்து வைப்பதோ, விற்பனை செய்வதோ, பதுக்கி வைப்பதோ சட்டப்படி குற்றம் என்று ஆகும் என்றும் அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா பரவல்? செயலாளர் முக்கிய ஆலோசனை!
மேலும் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட மாணவர்கள் இருக்கும் இடங்களில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அதன்படி குட்கா, பான்மசாலா உள்ளிட்ட மெல்லும் வகை போதை பொருட்களுக்கான தடை கடந்த 23ம் தேதியுடன் முடிவடைந்தது. இதனை மேலும் சில ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். அதன்படி தற்போது குட்கா, பான் மசாலா போன்ற போதைப் பொருட்களுக்கான தடை தமிழகத்தில் மேலும் 1 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.