ரயிலில் பயணம் செய்பவரா நீங்கள்? எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளில் மாற்றங்கள்! தெற்கு ரயில்வே அறிவிப்பு!
தமிழகத்தில் முத்துநகர், நெல்லை, செந்தூர் உள்பட 100க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நேரங்களில் இன்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையால் கடந்த மே மாதம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக ரயில்களில் பயணிகள் வருகை குறைந்ததால் முக்கிய சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. மேலும் இந்த ஊரடங்கு காலத்தில் அரசு பணியாளர்கள் மற்றும் கொரோனா தடுப்பு களப்பணியாளர்கள் போன்றவர்களுக்காக மட்டுமே பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டது. மற்ற ரயில்களை தொடர்ந்து சென்னையில் இயங்கி வரும் மெட்ரோ ரயில்களும் ரத்து செய்யப்பட்டது. கொரோனா பரவும் அச்சத்தால் மக்கள் ரயிலில் பயணம் செய்வதை தவிர்த்து வந்தனர்.
தமிழகத்தில் இன்று முதல் அரசு AC பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்துத்துறை அறிவிப்பு!
இந்த பயணிகள் வருகை குறைவால் ரயில்வே துறை கடும் சரிவை சந்தித்து வந்தது. இந்த நிலையில் அரசின் முயற்சியால் கொரோனா பரவல் குறைந்ததால் மீண்டும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் சில காரணங்களால் ரயில்கள் புறப்படும் நேரம் சென்றடையும் நேரம் போன்றவை மாற்றப்பட்டு அந்தந்த பகுதிகளுக்கு ஏற்றவாறு மாற்றம் செய்யப்பட்டது. கடந்த மாதத்தில் தமிழகத்தில் உள்ள பாம்பன் பாலத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் நேரங்கள் மாற்றப்பட்டது.
TN MRB உணவு பாதுகாப்பு அதிகாரி – 119 காலிப்பணியிடங்கள், அக்.13 முதல் விண்ணப்ப பதிவு!
அதனை தொடர்ந்து தற்போது முத்துநகர், நெல்லை, செந்தூர் உட்பட 100க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நேரங்களில் இன்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 8.15 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து சென்னை எழும்பூருக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 7.30 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 6.30 மணிக்கு தூத்துக்குடிக்கு புறப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.