தமிழக அரசின் மாநில ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு அமைப்பு – உத்தரவு வெளியீடு!
தமிழகத்தில் ஏற்றுமதியை ஊக்குவிக்க மாநில ஏற்றுமதி மேம்பாட்டுக் குழுவை அமைக்க அரசு சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
ஏற்றுமதி மேம்பாட்டு குழு:
தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு கடந்த மாதம் பட்ஜெட் தாக்கல் செய்தது. இதில் முதல்முறையாக வேளாண் துறைக்கு என்று தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிதிநிலை அறிக்கையில் மாநிலத்தின் வளர்ச்சி பாதைக்கு தேவையான திட்டங்கள் இடம் பெற்றிருந்தது. மேலும் அரசு மாநில வளர்ச்சிக் குழுவின் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி அதன் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்தும் முயற்சியில் அரசு இறங்கியுள்ளது.
நாளை ஒரு நாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
அதன்படி தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு 10 ஆயிரம் கோடி மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. மாநில வளர்ச்சியின் அடுத்தகட்ட பணியாக அரசு ஏற்றுமதியில் கவனம் செலுத்தி வருகிறது. பால் பொருட்கள் மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும் என்று சட்டசபையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 6 மொத்த விற்பனையாளர்கள் தேர்வு செய்யப்பட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 3, 5, 8 & 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு – முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்தல்!
அதனை தொடர்ந்து நேற்று சென்னை கலைவாணர் அரங்கில் ‘ஏற்றுமதியில் ஏற்றம் முன்னணியில் தமிழ்நாடு’ என்ற மாநாடு நடைபெற்றது. இதில் தமிழகத்தின் ஏற்றுமதி குறித்து கலந்துரையாடப்பட்டது. அப்போது முதல்வர் மாநில ஏற்றுமதி மேம்பாட்டுக் குழுவை அமைக்க திட்டமிட்டார். அதன் பேரில் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு தலைமையில் மாநில ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு 6 மாதங்களுக்கு ஒருமுறை ஏற்றுமதியின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.