மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% அகவிலைப்படி (DA) உயர்வு? முக்கிய காரணிகள் விளக்கம்!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% அகவிலைப்படி (DA) உயர்வு? முக்கிய காரணிகள் விளக்கம்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% அகவிலைப்படி (DA) உயர்வு? முக்கிய காரணிகள் விளக்கம்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% அகவிலைப்படி (DA) உயர்வு? முக்கிய காரணிகள் விளக்கம்!

வரவிருக்கும் பண்டிகை காலங்களை முன்னிட்டு 2022 ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி (DA) உயர்வை எதிர்பார்த்திருக்கும் மத்திய அரசு ஊழியர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய காரணிகள் இப்பதிவில் இணைக்கப்பட்டுள்ளது.

DA உயர்வு

அரசு வேலையில் இருப்பவர்களுக்கு ஊதியம் தவிர கூடுதல் சலுகையாக வழங்கப்படும் அகவிலைப்படி (DA) தொகை ஒரு முக்கிய விஷயமாக கருதப்படுகிறது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 2 முறை என்ற அளவில் உயர்த்தி வழங்கப்பட்டு வரும் அகவிலைப்படி (DA) தொகையானது, கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக கிட்டத்தட்ட 3 தவணைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பிறகு இந்த DA தொகையை 31% ஆக வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2022 – ஜனவரி 3 முதல் விநியோகம்!

இதற்கிடையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 3% DA உயர்வு வழங்குவது குறித்து அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் DA உயர்வு அறிவிக்கப்படும் என்ற நிலையில், வரவிருக்கும் ஜனவரி மாதத்திற்கான DA உயர்வு குறித்து இம்மாதம் அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது.

இதற்கிடையில் 18 மாதங்களாக நிலுவையில் வைக்கப்பட்டுள்ள DA தொகையை மொத்தமாக வழங்குவது குறித்து மத்திய அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அமைப்பு பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை விடுத்து வருகிறது. இந்த கோரிக்கைகள் குறித்து டிச.24ம் தேதி நடைபெற இருக்கும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் JCM தலைவர் ஷிவ் கோபால் மிஸ்ரா செய்தியாளர்கள் சந்திப்பின் போது, லெவல் 1ல் உள்ள ஊழியர்களுக்கு DA தொகை ரூ.11,880 முதல் ரூ.37,554 வரை இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கு இ – பதிவு கட்டாயம் | ஓமைக்ரான் எதிரொலி!

அதே போல லெவெல் 13ல் உள்ள ஊழியர்களுக்கு ரூ.1,23,100 முதல் ரூ.2,15,900 வரையும், லெவல் 14ல் உள்ள அரசு ஊழியர்களுக்கு ரூ.1,44,200 முதல் ரூ.2,18,200 வரையும் DA தொகை இருக்கும் என்று தெரிவித்துள்ளார். இப்போது மத்திய அமைச்சரவையில் இருந்து DA உயர்வுக்கு ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில், இதன் மூலம் சுமார் 65 லட்சம் ஊழியர்கள் பலனடைவார்கள் என்று தெரிகிறது. அந்த வகையில் 3% DA தொகைக்கு அரசு அனுமதி அளித்தால் மத்திய அரசு ஊழியர்களின் மொத்த DA தொகை 34% ஆக உயரும். இதன் மூலம் 47.14 லட்சம் ஊழியர்களும், 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!