தமிழகத்தில் புதிதாக 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி? அமைச்சர் விளக்கம்!

0
தமிழகத்தில் புதிதாக 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி? அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் புதிதாக 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி? அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் புதிதாக 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி? அமைச்சர் விளக்கம்!

தமிழகத்தில் புதிதாக 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் காலியாக உள்ள மருத்துவ பணியிடங்களை நிரப்புவது குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

சுகாதாரத்துறை அமைச்சர்:

தமிழகத்தில் தற்போது கொரோனா பரவலில் இருந்து மக்கள் மீண்டு வந்துள்ளனர். மேலும் தொற்றானது கட்டுக்குள் வரத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகள், தனியார் வேலை நிறுவனங்கள், தொழிற்சாலைகள் போன்றவைகள் செயல்படத் தொடங்கியுள்ளன. தற்போதைய தமிழக அரசு மக்களுக்கு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனை தவிர பள்ளி மாணவர்களுக்கு உதவும் வகையில் பயனுள்ள கல்வி நடைமுறைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் மருத்துவமனைகள் அமைத்து மருத்துவத் துறையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கி உள்ளது.

தற்போது தமிழகத்தில் கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வேலூர் மாவட்டத்தில் 952 இடங்களில் கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர், தமிழகத்தில் கொரோனா மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் நடந்து வருவதாகவும், முதல் தவணை தடுப்பூசி, 2ம் தவணை தடுப்பூசி, பூஸ்டர் தடுப்பூசி என போடப்படுகிறது எனவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழகத்தில் 27 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ள நிலையில், தடுப்பூசி போட வேண்டியவர்களின் எண்ணிக்கை 3.50 கோடியாக உள்ளது. மேலும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் கோவை எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்குவது குறித்து தமிழகத்தில் புதிதாக 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி அமைப்பது குறித்து ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து மருத்துவமனையில் காலியாக உள்ள 4,308 காலிப்பணியிடங்கள் அக்டோபர் மாதத்திற்குள் நிரப்பப்படும் என்று கூறியுள்ளார். தமிழகத்தில், காட்பாடியில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்ட ரூ. 30 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குரங்கு அம்மை நோய் குறித்து தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!