3ஆவது அலைவந்தால் மிகப்பெரிய அளவில் பாதிப்பு – மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை !!
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் செப்டம்பர் மாதம் கொரோனா மூன்றாம் அலை தாக்க வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுனர்கள் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
கொரோனா பரவல்:
கடந்த ஆண்டு முதல் கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. அந்த தாக்கத்தில் இருந்து படிப்படியாக மீண்டு வரும் நேரத்தில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் பரவ தொடங்கியது. முதல் அலையை போல இல்லாமல் இரண்டாம் அலை தாக்கம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியது.
ஊடரங்கு தளர்வுகளை ரத்து செய்ய வேண்டும் – மருத்துவர் சங்கத்தினர் அறிக்கை!!
நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, மரணங்களின் எண்ணிக்கை, ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருத்துவமனைகளில் படுக்கைவசதி தட்டுப்பாடு என மக்கள் பல சிரமங்களை சந்தித்தனர். இந்நிலையில் அரசின் துரித நடவடிக்கை காரணமாக கொரோனா பரவல் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. இந்நிலையில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் நாடு முழுவதுமாக கொரோனாவில் இருந்து மீண்டு வரவில்லை என மருத்துவ வல்லுநர்கள் தொடர்ந்து எச்சரிக்கை தெரிவித்து வருகின்றனர்.
TN Job “FB Group” Join Now
மேலும் கொரோனா மூன்றாம் அலை தாக்கம் செப்டம்பர் மாதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர், மேலும் இந்த அலையின் போது குழந்தைகள் அதிகம் பாதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் கொரோனா மூன்றாம் அலையை தடுக்க மக்கள் கட்டுப்பாடு நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் மற்றும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.