தமிழக அரசு பேருந்துகளில் முன்பதிவு சேவை விரிவாக்கம் – அமைச்சர் அறிவிப்பு!
தமிழக அரசு பேருந்துகளில் தொலைதூர வெளியூர் பயணத்தை தொடர இருக்கும் பயணிகளுக்காக முன்பதிவு சேவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
முன்பதிவு சேவை விரிவாக்கம்:
தமிழக அரசு பேருந்துகளில் பண்டிகை காலங்கள், முக்கிய திருவிழாக்கள் மற்றும் வார இறுதி நாட்கள் என பல்வேறு முக்கியமான நாட்களில் பொதுமக்கள் முன்பாகவே முன்பதிவு செய்து தங்களது சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். மேலும், தனியார் பேருந்துகளை காட்டிலும் அரசு பேருந்துகளில் கட்டணம் குறைவு என்பதாலும் அதிக அளவிலான பொதுமக்கள் முன்பதிவு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், முன்பதிவு செய்து வரும் பொதுமக்களுக்காக தமிழக அரசு தற்போது முன்பதிவு சேவையை விரிவாக்கம் செய்ய இருப்பதாக அறிவித்திருக்கிறது.
அதாவது, பாதுகாப்பான பயணத்திற்காக ஒரு மாதத்திற்கு முன்பாகவே இருக்கைகளை இணையதளம் மற்றும் தொலைபேசி மூலமாகவே முன்பதிவு செய்து கொள்ளலாம் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தற்போது அறிவித்திருக்கிறார். மேலும், அதிக அளவில் அரசு பேருந்துகளில் பயணிகள் முன்பதிவு செய்து வருவதனால் கூடுதல் பயணிகள் பயணம் செய்ய வேண்டும் என்பதற்காக 62,464 இருக்கைகள் வரைக்கும் அதிகப்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், முன்பதிவு செய்ய இருக்கும் பயணிகள் இன்று முதல் tnstc.in மற்றும் tnstc mobile app மூலமாகவே முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் அமைச்சர் சிவசங்கர் தற்போது அறிவித்திருக்கிறார்.